சென்னை, நவ. 28- ஆதார் எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைத்த பிறகும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து ள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் களுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் திங்கட்கிழமை (நவ. 28) முதல் டிசம்பர்31ஆம் தேதி வரை தினசரி காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் அமைந்து ள்ள மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சா ரம், விவசாய மானியம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்தாவதாக உண்மைக்கு மாறாக பரப்பப்படு கின்றது என்றார். எவ்வளவு பேர் சொந்த வீடு, வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் மின்சார வாரியத்தில் இல்லை. வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு உரிமையாளர்கள் மறுப்பது குறித்த புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
இலவச மின்சாரம் தொடரும்
ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தா லும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப் பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், முதியவர் களுக்கான வசதிகள் சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படும். 2.33 கோடி மின் நுகர்வோரில் 15 லட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். மின் இணைப்பை வேறு வகைகளில் பயன் படுத்துவதை கண்டு பிடித்தால்தான் சீரமைக்க முடியும். ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். எந்தவித அச்சமும் தேவையில்லை. மின் கசிவை சரிசெய்வதற்காகத் தான் ஆதார் இணைப்பு அவசிய மாக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை. டிசம்பர் 31 வரை கால வகாசம் உள்ளது. அவசரமாக ஆதாரை இணைக்க வேண்டும் என வேகப்படுத்த வேண்டியதில்லை. 1.59 லட்சம் கோடி கடன் மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் இணைக்கப்படுகிறது. மாதந் தோறும் மின்கட்டணம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடை முறைப்படுத்தபடும் என்றும் அமைச்சர் கூறினார்.