tamilnadu

img

ஜி.ஆர்.அனில் - உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் காலநிலை துறை அமைச்சர்

வாழ்த்துச் செய்தி

  ஓணத் திருவிழாவையொட்டி தீக்கதிர் நாளிதழ் ஒரு சிறப்பிதழ் வெளியிடுவதை அறிந்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  அசுரர்களின் மன்னனான மகாபலி, தனது மக்களுக்கு சமத்துவத்தையும் நீதியையும் உறுதிசெய்தான் என்பதை குற்றமாக முன்வைத்து தேவர்களால் நரகத்திற்குள் தள்ளப்பட்டான் என்ற புராணக் கதை இந்த விழாவின் பின்னணியில் உள்ளது என்பதை நாம் அறிவோம். மேற்கண்ட, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கதையிலிருந்து இத்திருவிழாவின் உணர்வு பெறப்பட்டது என்ற போதிலும் அந்த உணர்வு பல யுகங்களின் வழியாக இன்றைக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது; சமத்துவத்திற்காக போராடுகிற நவீன அரசியல் இயக்கங்களுக்கு பெரும் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் நாளிதழுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது வணக்கங்கள்.

;