tamilnadu

img

ஆயிங்குடியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

ஆயிங்குடியில் புதிய நேரடி  நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார் 

அறந்தாங்கி, ஜுன் 29-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிய நேரடி நெல் முதல் நிலையத்தினை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ . மெய்யநாதன் திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.  இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் முட்டைகளை இடைத்தரகர் இன்றி அரசு நேரடி நெல் கொள்முதல் மூலம்  காலதாமதமின்றியும், சேதாரமின்றியும் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.  இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ச.சிவகுமார், சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.