மதுரை, ஆக.31- மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி களை புதனன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதா வது: 8 வழிச்சாலையை பொறுத்த வரை தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. அர சாங்கம்தான் முடிவு எடுக்க முடி யும். எட்டு வழிச் சாலையை போட வேண்டும் என நான் பேட்டி கொடுக்கவில்லை அறிக்கையும் கொடுக்கப்படவில்லை . சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவ ராக முதல்வர் ஸ்டாலின் பேசும் போது 8 வழிச் சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்யத்தான் சொன்னார். திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதி கரிக்கும் போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண் டும்.
நிலங்களை எடுத்துத்தான் ஆக வேண்டும். 8 வழிச் சாலை திட்டம் வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. ஒன்றிய அர சின் திட்டம் இது. நாங்கள் சட்ட மன்றத்தில் எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதி முக அரசு பேசவில்லை. அதை செய்யத்தான் சட்டமன்றத்தில் சொன்னோம். 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை; ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு. சாலை அமைக்கப்படுமா, இல்லையா என அரசு தான் அறிவிக்கும்.நான் பேசிய கருத்து தவறாக திரித்துக் கூறப்பட்டுவிட்டது. கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணி அக்டோபர் மாதம் நிறைவடையும்,அடுத்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதிக் குள் முழுமையாக முடிக்கப் படும், பணி முழுமையாக நிறைவ டைந்தவுடன் அறிக்கை முதல்வ ருக்கு தாக்கல் செய்யப்படும், அதன் பிறகு திறப்பு விழா பற்றி முதல்வர் முடிவு செய்வார்.
ஜல்லிக்கட்டு அரங்கு ஒப்பந்தம்
ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு சின்ன இலந்தைக் குளம், அலங்காநல்லூர் அருகே மேலும் ஒரு இடம் பார்க்கப்பட்டுள்ளது.அது தொடர்பாக முதல்வரிடம் ஆலோ சிக்கப்பட்ட பிறகு, முதல்வர் அதி காரப்பூர்வமாக அறிவிப்பார். ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர் பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது, எப்போதுமே பொதுப்பணித் துறைதான் திட்ட அறிக்கை தயா ரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் விடு வார்கள். ஆனால் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளார்கள். இதனால் முதல்வர் தெரிவித்த தன் பேரில் அது ரத்து செய்யப் பட்டுள்ளது. விரைவில் பொதுப் பணித்துறை தரப்பில் ஒப்பந்தம் விடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின் போது பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி மேயர் வ. இந்தி ராணி, சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி, துணை மேயர் தி. நாக ராஜன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.