tamilnadu

img

உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வது என் கடமை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- உங்கள் கோரிக்கையை முதல மைச்சரிடம் கொண்டு செல்வது எனது தலையாய கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூ தியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்  டும். பணிக்கொடை ரூ 5லட்சம்  வழங்க வேண்டும். காலிப்பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்  கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கோரிக்கை  மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ரா.கலா தலைமை வகித்தார். கோரிக்  கைகளை விளக்கி பொதுச் செயலா ளர் அ.மலர்விழி பேசினார். தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் துவக்கவுரையாற்றினார்.  மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், அரசு  ஊழியர்களில் அதிக பங்கு வகிப்ப வர்கள் சத்துணவு ஊழியர்கள் தான். 65 ஆயிரம் சத்துணவு மையங்களில் 55 அங்கன்வாடி மையங்களில் பணி யாற்றும் 2 லட்சம் ஊழியர்கள் இந்த  சங்கத்தில் உள்ளனர். இன்றைக்கு நீங்கள் வைக்கின்ற நியாயமான கோரிக்கைகள், தேர்தல் நேரத்தில்  வாக்குறுதிகளில் சொல்லப்பட்டி ருக்கின்ற கோரிக்கையை மீண்டும் நினைவுபடுத்துகின்ற நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டி ருக்கிறது. வருகிற திங்கட்கிழமை சென்னையில் நடைபெறும் எண் ணும் எழுத்தும் நிகழ்ச்சியில் முதல்வ ருடன் கலந்து கொள்ளப்போகிறேன். எண்ணும் எழுத்தும் என்ற நிகழ்வு களில் என்ன பேசப்போகிறேன் என்  கிற கருத்தை ஒரு கையிலும், உங்க ளுடைய கோரிக்கை ஏந்திய கருத்தை மறு கையிலும் ஏந்தித்தான் கண் டிப்பாகச் செல்வேன். இந்த மாநாட் டிற்கு தமிழகத்தில் இருந்து வருகை  தந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் நல்ல ஒரு வாழ்வை பெற வேண்டும்  என்கிற அந்த நல்ல கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு செல் வது என்பது எனது தலையாய கட மையாக இருக்கும் என்றார். 

கந்தர்வக்கோட்டை சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசுகையில், எனக்கு இரண்டு முறை சட்டப்பேரவையில் பேசு கின்ற வாய்ப்பு கிடைத்த போது, தமி ழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி யில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஊழியர்களையும் நிரந்தரப்படுத்து வேன் என உறுதி கொடுத்துள்ளீர்கள். இரண்டு ஆண்டுகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற போதும் அந்த அறிக்கையில் இது குறித்து இடம்பெறவில்லையே என்ற  வருத்தத்தை தெரிவிக்கும் போது தமிழக முதல்வர், நாங்கள் நிச்சய மாக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்  துள்ள அனைத்தையும் நிறைவேற்று வோம் என சட்டப்பேரவையில் அழுத்  தமாக உறுதியளித்தார். நீங்கள்  இன்று திருச்சியில் நடத்துகின்ற இந்த மாநாடு 40 ஆண்டுகால கோரிக்கை களை நிறைவேற்றுகின்ற ஒரு மாநா டாக அமையும். 40 ஆண்டுகளில் நிறைவேறாத இந்த கோரிக்கைகள் இந்த 4 ஆண்டுகளில் நிச்சயம் நிறைவேறும் என்பதற்காக தான் நாம் எல்லோரும் இணைந்து தமிழகத்தை பாதுகாப்பதற்காக நின்று கொண்டி ருக்கிறோம். நமது கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிச்சயம் நிறை வேற்றுவார் என்றார். 

திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர், திருத்துறைப்பூண்டி சிபிஐ சட்ட மன்ற உறுப்பினர் க.மாரிமுத்து,  திருப்போரூர் விடுதலை சிறுத்தை கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஜாக்டோ – ஜியோ  ஒருங்கிணைப்பாளர் கு.வெங்க டேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மூ.மணிமேகலை, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க  மாநில பொருளாளர் வி.சோமசுந்த ரம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் என்.திருவரங்கன், தமிழ்  நாடு நெடுஞ்சாலை சாலை பணியா ளர்கள் சங்க மாநில தலைவர் மா. பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்  டத் தலைவர் முனைவர் கா.பால் பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  சத்துணவு திட்டமும், சத்துணவு ஊழியர்களின் நிலையும் என்ற தலைப்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநி லத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரை யாற்றினார். முன்னதாக திருச்சி  மாவட்டத் தலைவர் பி.சத்தியவாணி வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார்.