திருவனந்தபுரம். ஜுன் 9- ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கேரளத்தில் அம லாக்கப்படவில்லை எனவும் மக்கள் அதன் பயன்களை பெற முடிய வில்லை எனவும் பேசியிருப்பது தவ றான தகவல் என கேரள சுகாதா ரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறியதாவது: ஆயுஷ்மான் திட்டத்தில் கேர ளம் உறுப்பினராக உள்ளது. 2018 நவம்பர் 2ஆம் தேதி அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்யப்பட்டது. திட்டத்தின் பயன் கேரளத்தில் உள்ள மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது முதல்கட்ட பங்கு விகிதமும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க பிரதமருக்கு யாரோ தவறான தகவல் தெரிவித் துள்ளதாக கருத வேண்டி உள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ளும்போது பிரதமர் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள் வார் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் கப்பீட்டுத் திட் டத்தை அதே முறையில் கேர ளத்தில் அமல்படுத்துவது சாத்திய மில்லை. ஆகப் பெரும்பான்மை யான மக்களும் இந்த திட்டத்திலி ருந்து வெளியேறும் சூழ்நிலை யில் கேரளத்தில் உள்ள அனைத்து காப்பீட்டுத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் அனை வருக்கும் காப்பீட்டுப்பயன்களை உறுதிப்படுத்தி காருண்யா ஆரோ க்கிய பாதுகாப்பு திட்டம் (கேஐ எஸ்பி) ஏப்ரல் முதல் தேதியிலி ருந்து மாநிலத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது. மாநில அளவில் சிகிச்சை அட்டை வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சி மார்ச் 5ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்தது. 1.46 லட்சம் பேருக்கு இந்த திட்டத் தின் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பி லான சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது. 17 லட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்தும் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிக அதிக முன்னேற்றத்தை கண்டுள்ள மாநி லம் கேரளமே என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஆர்எஸ்பிஒய் திட்டத்தில் உள்ள 21.5 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்லாது சீஸ் திட்டத்தில் 19.5 லட்சம் குடும்பங்கள் உட்பட 41 லட்சம் குடும்பங்களுக்கு கேர ளத்தில் ஏற்கனவே காப்பீடு மூலம் மருத்துவ பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. கடைசியாக வெளி யிடப்பட்ட சமூக-பொருளாதார-சாதி கணக்கெடுப்பு அடிப்படை யில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களையே ஆயுஷ்மான் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள் ளது. அதன்படி பார்த்தால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 18.5 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 2011 மக்கள் தொகை கணக்கின்படி பயனாளிகளாக முடியும். அதாவது 22 லட்சம் பேர் காப்பீட்டு பாதுகாப்பிலிருந்து வெளி யேறுவார்கள். அத்தகைய சூழ்நிலையை கருத்தில்கொண்டே அரசு இம்முயற்சி மேற்கொண்டது. நல்வாழ்வுத் துறையில் கேரளம் உன்னதமான செயல்பாடுகளை கொண்டுள்ள போது பிரதமரின் இத்தகைய பிரச்சாரம் ஏமாற்ற மளிப்பதாக உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.