tamilnadu

இன்று சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மே தின கொண்டாட்டம்!

இன்று சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மே தின கொண்டாட்டம்!

சென்னை, ஏப்.30 - 135-ஆவது மே தினத்தையொட்டி, சிஐடியு-ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில், வியாழனன்று தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் - பேரணிகள் நடைபெறுகின்றன. இதில், சிஐடியு சார்பில் வடசென்னையில் ஏ.கே. பத்மநாபன், தென்சென்னையில் டி.கே. ரங்கராஜன், மத்திய சென்னையில் கே.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரத்தில் அ.சவுந்தரராசன், திண்டுக்கல்லில் உ.வாசுகி, நாகப்பட்டினத்தில் பெ. சண்முகம், திருச்சி புறநகரில் ஆர். கருமலையான், திருச்சி நகரில் கே. பாலபாரதி மற்றும் ஏஐடியுசி சார்பில் இரா. முத்தரசன், மு. வீரபாண்டியன், டி.எம். மூர்த்தி, ம.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மே தின விழாக்களில் பங்கேற்கின்றனர்.