tamilnadu

img

திருச்சி மாநகராட்சியுடன் மாடக்குடி ஊராட்சியை இணைக்கக் கூடாது

திருச்சிராப்பள்ளி, ஆக, 19-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.    கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வழங்கினர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த, 27 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநக ராட்சியுடன் இணைக்க உள்ளனர்.இதனால் ‘ மாடக்குடி ஊராட்சியின் விவ சாயம், கிராம மக்களின்  வாழ்வாதார மாக விளங்கக் கூடிய100 நாள் வேலை திட்டம் பாதிக்கும், வீட்டு வரி உயரும்.  எனவே, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராமங்களை கொண்ட  மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து  மாடக்குடி கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் என 1000க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் தலைமையில்  ஆட்சியர் அலுவல கம்  திரண்டு வந்தனர். முற்றுகை அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும் என கூறினர்.அதற்கு ஆட்சியர் அலுவலக நுழை வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் அனுமதிக்க மறுத்த னர். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் ஆட்சியர் அலு வலக நுலைவாயில் கதவுகளை இழுத்து மூடினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், பாலு,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெரால்டு, எடக்குடி சுரேஷ், சாத்தம்பாடி ரமேஷ், அகிலாம்பாள், அனைத்து வார்டு உறுப்பினர்கள், சுய உதவி குழுவினர், சர்வ கட்சி பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள்  உள்பட 1000க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக நுலைவாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் முக்கிய பிர முகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை  நேரில் சந்தித்து மனு அளிக்ககாவல்துறையினர் அழைத்துச் சென்றனர். 1000 ஏக்கர் விவசாயம்... முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த 2021 ஆம் வருடமே மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சி உடன்  இணைக்கக் கூடாது என மிகப் பெரிய போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்தினர். கிராம சபை  கூட்டத்தில் மாநகராட்சி உடன் இணைக்கக் கூடாது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. மேலும் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம்போடப்பட்டது.  மாடக்குடி ஊராட்சி முழுக்க,முழுக்க நஞ்சை பகுதி. இன்றளவும் கிராமப் பகுதியாக உள்ளது. 70சதவிகிதம் விவசாய நிலங்களை கொண்டது. இன்றளவும் 1000 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு போன்ற வேலைகளும் நடைபெறுகின்றன. தண்ணீர் இல்லாத காலத்தில் கூட  27 குமுளி பாசனம், பழைய பெருவளை மற்றும் பங்குனி வாய்க்கால்கள் மூலம் 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட பகுதி. 1250 பேர் வேலை அட்டை (ஜாப் கார்டு) வைத்து 100 நாள் வேலை செய்து வருகின்றனர். மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைப்பதால் ஆயிரம் ஏக்கர் விவசாயம் அழிக்கப்படும். பெருவள வாய்க்கால் மற்றும்  பங்குனி வாய்க்கால் சாக்கடைகளாக மாறும் அவலம் ஏற்படும். 100 நாள் வேலை பறிபோகும். குடிசை வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் வரி உயரும். எனவே இப்பகுதி விவசாயம் மற்றும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாடக்குடி ஊராட்சியை மாநக ராட்சியுடன் இணைக்கக் கூடாது என்றார். சோமரசம் பேட்டை, அல்லித்துறை, புங்கனூர் பகுதியும் எதிர்ப்பு இதேபோன்று சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என சமூக நீதிப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.  புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்கக் கூடாது என ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.