tamilnadu

img

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 11- சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை பிரச் சனைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மலுமிச்சம்பட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகில் சாக்கடை கழிவுநீர், நான்கு வழிச்சாலையில் தேங்கியுள்ள தால், அப்பகுதி நோய் பரவும் மையமாக மாறியுள்ளது. எனவே, வடிகால் அமைத்து தர வேண்டும். சிக்னலில் போக்குவரத்து காவலரை பணியமர்த்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டி யுள்ள சாலையை சீரமைத்திட வேண்டும். மதுரை வீரன் கோவில் பகுதி மக்களுக்கான மயான பாதையில் தெரு விளக்கு, மயானத்தில் தண்ணீர் வசதி, தங்குமிடம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மலுமிச்சம்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்  மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், மதுக்கரை ஒன்றிய செயலாளர் எம்.பஞ்சலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணி, கே.வரதராஜ், டி.கே. ஆழ்வார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.