tamilnadu

தலித் முதியவர் வன்கொலை!

தஞ்சாவூர், ஜன. 22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தலித் முதியவர் அருணாச்சலம், சாதிய ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம், தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: சாதி ஆதிக்க வெறியாட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதிய வர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச்செயலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பட்டியல் சமூக முதியவர் 62 வய தான அருணாச்சலம் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞ னால் சாராய பாட்டிலால் கழுத்திலும் உடலிலும் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஊர் மக்க ளும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னணியில் குற்றவாளி நள்ளிரவே கைது செய்யப்பட்டுள்ளார். கவலையளிக்கும் வன்செயல்கள் இத்தகைய வன்செயல்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது கவலையளிக்கிறது. அரசு இயந்தி ரமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளும், வன் செயல்களும் அதிகமாக நடந்தேறு கிற பகுதிகளை அடையாளம் கண்டு,  பட்டியல் சாதி மக்களுக்கு பாதுகாப்பு  வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். தீருதவியை தாமதமின்றி வழங்குக! தமிழ்நாடு அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் தீரு தவியை தாமதமின்றி வழங்கிட வேண்டும். அருணாச்சலம் மகன் மணிகண்டனுக்கு அரசு வேலையை விரைந்து வழங்கிட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ள டாஸ்மாக் கடை யை உடனடியாக மூட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் போராட்டத்தில் வருவாய் கோட்டாட்சி யரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும் அளித்த உறுதி மொழிகளை விரைந்து நிறை வேற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு  பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.