சென்னை, செப். 26 - மாதர் சங்கத்தின் ஸ்தாபகர்க ளில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமன் நினைவுச்சுடர் பய ணம் திங்களன்று (செப்.26) சென்னையிலிருந்து தொடங்கி யது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு செப்.29, 30, அக்.1 ஆகிய தேதிகளில் கடலூரில் நடைபெறுகிறது. இதனை யொட்டி சென்னையிலிருந்து தோழர் மைதிலி சிவராமன் நினைவுச்சுடர் கொண்டு செல்லப் படுகிறது. இந்த நினைவுச்சுடர் பயண தொடக்க நிகழ்ச்சி திங்களன்று (செப்.26) மயிலாப்பூரில் நடை பெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார். நினைவுச்சுடரை தோழர் மைதிலி சிவராமனின் மகள் பேரா.கல்பனா கருணாகரன் வழங்க, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சித்ர கலா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பொருளாளர் ெஜ.ஜூலியட், முன்னாள் மாநிலச் செயலாளர் கே.வனஜகுமாரி, எம்.சரஸ்வதி எம்.சி., மயிலாப் பூர் பகுதிச் செயலாளர் எஸ்.செல்வி, கே.கங்கா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.