மதுரை, நவ.14- மதுரை சர்வேயர் காலனி முதல் மாட்டுத் தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் இடை யிலான 120 அடி சாலை பருவமழை தொடங்கு வதற்கு முன்பே சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையைச் சீரமைக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பருவமழை தீவிரமடைந்தால் சாலை இன்னும் மோச மாகிவிடும். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்கிறார் சோழவந்தானைச் சேர்ந்த ஜெயராமன். சாலையில் ஓடும் கழிவு நீர் மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள சாலைகள் நடந்து செல்லக்கூட லாயக் கற்ற நிலையில் உள்ளன. பல இடங்களில் சாக்கடை நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பாதாளச் சாக்கடை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி, கழிவுநீர் சாலை யில் ஓடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த என்.ஆறுமுகநயினார். மதுரை நகர் பசுமையாக மாற வழி அதிகாரப்பூர்வ உத்தரவின் பேரில் மரங் கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. சாலை யோரம் நடப்படும் மரங்கள் நேராக வளராது. பேருந்துகள், லாரிகள் செல்லும் போது மரத்தின் கிளைகள் உடைகின்றன. மின்வாரி யம் மின் கம்பிகளில் உரசாத வகையில் மரக்கிளைகளை வெட்டுகின்றன. ஆனால் அது மட்டுமே தீர்வாகாது. மின் இணைப்பு கள், கேபிள் வயர்களை பூமிக்கடியில் கொண்டுவர வேண்டும். அப்போது தான் பசு மையான நகர உருவாக்க முடியும் என்கிறார் மதுரை குருவிக்காரன் சாலையைச் சேர்ந்த துளசிராஜ் ரவில்லா. தி இந்து இணையதளத்திலிருந்து