மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, டிச.18- மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,” தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த வாக்குறு தியின் அடிப்படையில் டிசம்பர் 9-ஆம் தேதி மாவட்ட பஞ்சா யத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளி யிடக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 15 நாட்க ளுக்குள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு செவ்வாயன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந் திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநக ராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தலை அடுத்த கட்டமாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழகஅரசு, தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள் தெரி வித்தனர். இதையடுத்து அதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விருதுநகர், டிச.18- விருதுநகர், மாத்திநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சண்முகம் என்ற சண்முகராஜ் (42). அதிமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக அவருடைய வீட்டின் முன்பு கடந்த நவ.12-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல்துறையினர் வழககுப் பதிவு செய்து அல்லம்பட்டியைச் சேர்ந்த சேர்ம ராஜ் (34), எம்.சதீஷ்குமார் (24), விக்கி என்ற விக்னேஷ், கீர்த்தீஸ்வரன், கிரி, பாலமுருகன், சதீஷ்குமார், பி. சதீஷ்குமார் ஆகிய எட்டுப் பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் சேர்மராஜ், எம்.சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்ற ஆறு பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் சேர்மராஜ், எம்.சதீஷ்குமாரை ஆகி யோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விடக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறை யிலடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனர்.
திருவில்லிபுத்தூரில் “புலி” பீதி
திருவில்லிபுத்தூர், டிச. 18- திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமை கள், ராஜநாகம், மலைப்பாம்புகள் அதிகளவில் வசிக்கின்றன. வனப்பகுதியில் சில இடங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளது. புலிகளை கண்காணிக்க கேமிரா பொருத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் கேமிரா பொருத்துவது தாமத மாகும் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பகுதியில் புலி ஒன்று திரிவதாக வீடியோ ஒன்று வைர லாக பரவி வருகிறது. எடுக்கப்பட்ட வீடியோ செண்பகத் தோப்பு பகுதியில் பதிவானதா என்பது குறித்து விசா ரணை நடைபெற்றுவருகிறது.