தனிநபர் ஒருவராக மார்க்சிஸ்ட் கட்சி யின் கலை இலக்கிய ஏடான செம் மலர் மாத இதழை மாதம் ஆயிரம் பிரதியை தன் சொந்த நிதியில் பெற்று அதனை விற்று வரும் கட்சியின் ஆதரவாளர் மோகன் பாராட்டப்பட்டார். மாநிலத்தில் எங்கு கட்சி அமைப்புகள் சார்ந்த நிகழ்வுகள் நடை பெற்றாலும் அங்கு சென்று செம்மலரை விற்று அதன் ஈவுத்தொகையில் தனது பயணத்திற்கான கட்டணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதர தொகையை சம்பந்தப்பட்ட கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கே கொடுத்துவிட்டு வரு கிறார். மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற மோகன் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த பணியை மேற்கொண்டு வரு கிறார். இவரை கௌரவிக்கும் வகையில் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் சால்வை அணிவித்து கௌரவித் தார். கட்சியின் ஆதரவாளரான ஒரு வரே இத்தகைய முயற்சியை சிறப்பாக முன்னெடுக்கும்போது கட்சியின் உறுப்பி னர்கள், தலைவர்கள் இதனைவிட ஒருபடி மேலே நமது கட்சியின் பிரசுரங்களை கூடுதலாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற அறை கூவல் விடப்பட்டது.
கோயம்புத்தூர், டிச.26– தீக்கதிர் என்கிற சொல்லும், நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம் தான் என்று பெருமிதம் அடையும் நிலை யில், இதனை மென்மேலும் வளர்த்தெ டுத்து பாதுகாப்பது நமது கடமை என கோவையில் மதுக்கூர் ராமலிங்கம் உரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் விடு தலைப் போராட்ட வீர்ர் சங்கரய்யா நூற் றாண்டு விழா, வெண்மணி தியாகிகள் நினைவு தினம், தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்பு என்ற முப்பெரும் நிகழ்வு டிசம்பர் 25 சனிக்கிழமை நடைபெற்றது. காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுக்கூர் ராம லிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள வைக்குழு தலைவர் பி.ஆர்.நடராஜன், செம்மலர் மூத்த ஆசிரியர் எஸ்.ஏ.பெரு மாள், கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர்கள் கே.காமராஜ், சி.பத்மநாபன், எம்.கண்ணன், தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், விநியோக மேலாளர் ஏ.நெல் சன்பாபு, விளம்பர மேலாளர் கே.அழகப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள், இடைக்குழுக்கள், மாவட்டக் குழுக்கள் மூலம் 578 தீக்கதிர் நாளிதழுக் கான சந்தாக்கள் முதல் தவணையாக சேர்க்கப்பட்டு இதற்கான சந்தா தொகை 11 லட்சத்து 72 ஆயிரத்து 270 ரூபாயை கட்சி யின் தலைவர்களிடம் வழங்கப்பட்டது
கோவை உழைப்பாளிகள்
இதைத்தொடர்ந்து, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் பேசுகையில், கோவை உழைப் பாளி மக்களுக்கு, செங்கொடி இயக்கத் திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. பட் டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு மக் கள் கவிஞன் என்கிற பெயரை கொடுத்து கௌரவித்தது கோவை உழைப்பாளி மக் கள்தான். இதேபோல தீக்கதிர் என்கிற சொல்லும், நெல்லும் கொடுத்து உரு வாக்கியவர்கள் கோவை தொழிலாளி வர்க்கத்தினர். ஆகவே, தீக்கதிரின் முதல் இதழின் முகப்பில் தீப்பந்தம் ஒன்றும் லெனின் படமும் இடம்பெற்றிருக்கும். கோவை தொழிலாளி வர்க்கம் கொடுத்த நெருப்பை ஏந்தி தீக்கதிர் வெளி வருகிறது என்கிற வாசகம் அதில் இடம்பெற்றிருக்கும். மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது கட்சி யின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் மாறி யது. மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு தீக்கதிர் முதன்மை பங்கு வகிக்கிறது என் றால் அது மிகையாகாது. இதன் முதல் ஆசி ரியர் தோழர் என்.சங்கரய்யா. இதன்பிறகு கே.முத்தையா போன்ற தலைவர்கள் ஆசி ரியர்களாக இருந்தனர். அத்தகைய பெருமை மிக்க தீக்கதிர் நாளிதழை மென்மேலும் வளர்தெடுப்பதில் கோவை தொழிலாளி வர்க்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அநீதிக்கு எதி ராக கையில் சாட்டை எடுத்த ஏசுவும் ஒரு வகையில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முன் னோடியானவர்தான். இதே நாளில்தான் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று பிரகட னப் படுத்திக்கொண்டவர் சார்லி சாப்ளின். பாசிஸ்ட்டான ஹிட்லரை எதிர்த்து துணிச்ச லோடு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப் படத்தை எடுத்தவர். அந்த சார்லி சாப்ளின் நினைவு தினம் இன்றுதான் (டிச.25) அவரை யும் நாம் நினைவு கூர்வோம்.
ஏசு நாதர் பிறந்து விட்டார். தேவகுமா ரன் பிறந்துவிட்டார் என உலகமே கொண்டா டிக் கொண்டிருந்த நேரத்தில், வேளாங் கண்ணியில் விளக்குகள் எரிந்து கொண்டி ருந்தபோது கீழவெண்மணியில் குடிசை களை எரித்து பண்ணையார்கள் கொடிய பயங்கரத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த னர். அதில் குழந்தைகள் முதல் முதிய வர்கள் வரையில் 44 அப்பாவி உயிர்களை தீக்கிரையாக்கினர். வெண்மணி தியாகம் என்பது நெடிய வரலாறு. அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்கான போராட்டம் மட்டுமல்ல. தீண்டாமைக்கெதிரான நெடிய போராட்டத்தின் ஒருபகுதி. அது வர்க்க போராட்டம். சமூக நீதிக்கான போராட்டம். மூன்று படி உயர்த்தி தருகி றோம். குடிசையில் பறக்கிற செங்கொடி யை இறக்குங்கள் என்றார்கள் பண்ணை யார்கள். ஆனால் வெண்மணியின் செங் கொடி இயக்கத்தின் புதல்வர்கள் சொன் னார்கள். எங்களை தலை நிமிர வைத்த செங்கொடியை ஒருபோதும் இறக்க முடி யாது என்று. ஆகவே, இன்றும் தஞ்சைத் தரணியில் உழைப்பாளி மக்களால் பி.சீனி வாசராவ் ‘குலசாமியாக’ பார்க்கப்படு கிறார். கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார் கள் என்கிற கேள்வி எழுப்புவர்களுக்கு இதுதான் பதில். இன்று நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார் தோழர் என்.சங்க ரய்யா. தமிழ் இலக்கியத்தில் கரை கண்டவர் சங்கரய்யா, எதைப்பார்த்தாலும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தோடு பார்ப்பவர். இவரின் பொதுவாழ்க்கை துவங்கியதே இந்தி திணிப்பை எதிர்த்த மொழிப் போராட்டத்தில்தான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஏ ஹனார்ஸ் பட்டம் படித்து கொண்டிருந்தபோது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதே அமெரிக்கன் கல்லூரி இன்று சங்கரய்யா வின் நூற்றாண்டு விழாவை கொண்டாடு கிறது என்பதுதான் பெருமை. தேசத்திற் காக, விடுதலைக்காக, பாட்டாளிகளுக் காக, மொழிக்காக போராடியவர் சங்க ரய்யா. பிரிவினைக் குரல்கள் எப்போது எழுந்தாலும் அப்போதெல்லாம் சங்கநாதம் செய்தவர் சங்கரய்யா. இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் பேசினார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முடி வில் மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் நன்றி கூறினார்.