மெய்க்குடிப்பட்டிக்கு புதிய பேருந்து எம்.சின்னதுரை எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை, ஜுன் 28-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து மெய்க்குடிப்பட்டிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை, வெள்ளிக்கிழமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மெய்க்குடிப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டும் என அப்பகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கோரிக்கை வைத்து வந்தனர். எம்.சின்னதுரை எம்எல்ஏ எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கந்தர்வகோட்டையில் இருந்து மெய்க்குடிப்பட்டிக்கு, சனிக்கிழமை புதிய பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது. பேருந்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வர்த்தக மேலாளர் ஜேசுதாஸ், கந்தர்வகோட்டை கிளை மேலாளர் சக்திவேல், திமுக நரசச் செயலாளர் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.