திருப்பூர், ஜன. 20 - பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோய லுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்ப தற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. நூல் உற்பத்தி யில் 47 சதவிகிதம், பின்னலாடை உற்பத்தியில் 55 சதவிகிதம் பங்கு வகிப்பதுடன் லட்சக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண் களுக்கு, வேளாண்மை துறைக்கு அடுத்து அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்து வரும்துறையாக இது உள்ளது.
இத்துறையின் செயல் பாட்டை பாதிக்கும் பிரச்சனை களை கருத்தில் கொண்டு முதல்வர் தாமாகவே முன்வந்து மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடி தம் எழுதியதற்கு நன்றி தெரி விக்கிறோம். பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவிகித இறக்குமதி வரியை நீக்கவும், பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்யவும் ஒன்றிய அரசு உட னடியாக நடவடிக்கை எடுத்தால் பருத்தி மற்றும் நூல் விலை உயர் வைக் கட்டுப்படுத்தமுடியும். இதை முதல்வர் குறிப்பிட்டிருப்ப தற்கு நன்றி. அத்துடன் நூல் மற்றும் துணி ஏற்றுமதி நம் போட்டி நாடுகளுக்கு சாதகமாக உள்ளது. இது நம் பின்னலாடை ஏற்றுமதியை மிகவும் பாதிக்கிறது. எனவே மாதந்தோறும் நூல் மற்றும் துணி ஏற்றுமதி அளவை வரையறுத்து அனுமதிக்க வேண்டும் அல்லது நிலைமை சரியாகும் வரை தடை விதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவும் முதல்வர் கோர வேண்டும். முதல்வரின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜா எம்.சண் முகம் கூறியுள்ளார்.