சென்னை, ஜூன் 8- அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்கள வைத் தேர்தலில் சனாதன சக்திகளை வீழ்த்த கலைஞரின் நூற்றாண்டு விழாவில் சபதமேற் போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி னார். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கலைஞர் தன்னுடைய 13 வயதிலேயே ‘செல்லசெந்துரா’ என்ற சரித்திர நாவலை எழுதி சாதனை படைத்தவர். ஆளுநர் மாளிகையில் இன்று அமர்ந்தி ருப்பவர் திராவிடம், தமிழ், தமிழ்நாடு குறித்து எதுவும் தெரிந்துகொள்ளாமல் அவர் விருப் பம்போல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அரசு மாளிகையில் அமர்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா? எந்தவிதமான கட்டுப்பாடும் ஆளுநருக்கு கிடையாதா ? கலைஞர் விரும்பிய கொள்கைகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், சனாதன சக்திகள் பணியாற்றிக் கொண்டிருக்கி றார்கள். அதை அமல்படுத்தக் கூடிய அம்பாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சனா தனத்தை, பிராமணியத்தை எதிர்க்கிற மகத்தான போராட்டத்தை முன்னெடுத்தது மட்டுமல்லா மல், இந்தி மொழி ஆதிக்கம் கூடாது, தங்கத் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திய பெருமை கலைஞ ருக்கு உண்டு என்றார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றி, கருவறைக்குள் நுழைய வைத்த பெருமை கலைஞரையே சாரும். நாட்டுக்கு ஒரு பேராபத்து வருகிற போது, ஆபத்தை எதிர்ப்பதா அல்லது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதா என்ற நிலை வரும் போது, அதிகாரம் போனாலும் பரவாயில்லை, அதிகார துஷ்பிரயோகத்தை அனுமதிக்க மாட்டேன் என்று இரண்டு முறை பதவியை இழந்தவர் கலைஞர் என்றார். மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். இந்தியா ஒரு கூட்டமைப்பான நாடு. இங்கு ஒரே ஒன்றிய ஆட்சி என்பது இருக் கக் கூடாது, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து அந்த பணியை முன்னெடுத்துச் சென்றார். மாநில சுயாட்சிக்காக போராடிய கலைஞரின் கொள்கைகளை இன்று களங்கப்படுத்தும் வகை யில் ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது. மொழி உரிமையை, மாநில உரிமையை தட்டிப் பறிக்க பார்க்கிறார்கள். மாநிலத்தின் நிதி ஆதா ரங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு செல்கி றார்கள். எந்த சனாதன சக்திகளை எதிர்த்து கலைஞர் போராடினாரோ, அந்த சனாதனத்தை மீண்டும் அரியணையில் ஏற்ற துடித்துக் கொண் டிருக்கிறார்கள். எனவே கலைஞரின் நூற் றாண்டு விழா என்பது சனாதன சக்திகளுக்கு சாவு மணி அடிக்கும் விழாவாகும் என்றும் அவர் கூறினார்.
மார்க்ஸ் சிலை நிறுவுக!
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவடைவ தற்கு முன்பு உலக தொழிலாளி வர்க்கத்தின், சமதர்ம சோசலிச தத்துவத்தின் மாமேதையாக விளங்கிய, கம்யூனிச தத்துவத்தின் தந்தை காரல் மார்க்ஸ் சிலையை சென்னையிலே நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் தார். மேலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்கள் கட்டியுள்ள சனாதன நாடா ளுமன்றம் மதச்சார்பற்ற நாடாளுமன்றமாக திக ழும் நடவடிக்கையை மேற்கொள்ள கலை ஞரின் நூற்றாண்டு விழாவில் அனைவரும் சபதமேற்போம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வ ரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் ஆகியோரும் பேசினர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வரவேற்புரை ஆற்றினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், திருவிக வடக்கு பகுதி செய லாளர் செ.தமிழ்வேந்தன், அம்பத்தூர் மண்ட லக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி உள்ளிட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கள் கலந்து கொண்டனர்.