ஓரணியில் இருப்போம்; தமிழ்நாட்டின் உரிமை காப்போம்!
விரிசல் வராது! எங்களின் ஒற்று மையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம்... அவர்க ளுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர; எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது!
இதய நாற்காலியில்....
தோழமைக் கட்சித் தலைவர் களே... என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்த வர்கள் நீங்கள். உங்களை எப்போ தும் என்னுடைய இதய நாற்காலி யில் நான் உட்கார வைத்திருக் கிறேன்! உங்களுக்கு நான் உறுதி யோடு சொல்லிக் கொள்கிறேன்... நம்முடைய ஒற்றுமைதான், தமிழ் நாட்டைக் காப்பாற்றியிருக்கிறது! தமிழைக் காப்பாற்றியிருக்கிறது! சமூகநீதியைக் காப்பாற்றியிருக் கிறது! சகோதரத்துவத்தைக் காப்பாற்றியிருக்கிறது! ஒற்றுமை யைக் காப்பாற்றியிருக்கிறது! ஏன், ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியிருக்கிறது!
தமிழகத்தைக் காப்பாற்றினோம்
நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... 2021-இல் தப்பித்தவறி அதிமுக - பா.ஜ.க கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரைமட்டத்துக்கு சென்றி ருக்கும்! தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளும் அதிமுக கொத்த டிமைகளால் அடகு வைக்கப்பட்டி ருக்கும்! அதிமுக-வை மிரட்டிப் பணிய வைத்து, அவர்கள் கட்சியை யும் - தமிழ்நாட்டையும் கபளீகரம் செய்திருக்கும் பா.ஜ.க.! இந்தக் கொடிய சக்திகளிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி, நம்மு டைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! இன்றைக்கு, இந்தியா வுக்கு வழிகாட்டும் கூட்டணியும் நமது கூட்டணிதான்! தமிழ்நாட்டை மற்ற மாநில மக்கள் எல்லாம், வியந்து பார்க்கிற வகையில் திமுக ஆட்சி யைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இதை ஒன்றிய பாஜக அரசால், தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வஞ்சிக்கிறது பாஜக
நம்முடைய மாநிலத்துக்கு எந்த நன்மையையும் செய்வது இல்லை! பிறகு, என்ன செய்கிறார்கள்? எப்படி யெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்க லாம் என்று பார்த்து பார்த்துச் செய் கிறார்கள்... நீட் தேர்வைத் திணித் தார்கள். புயல் – வெள்ளம் என்று பேரிடர் வந்தால், நிதி கொடுப்ப தில்லை! இப்படி தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! சமீப காலமாக, தமிழ்நாடு எதனால் முன்னணியில் இருக்கிறது என்று பார்த்தவர்கள், கல்வியால் தான் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்தக் கல்வியைச் சீர்கு லைக்க, தேசிய கல்விக் கொள்கை யைத் திணித்தால் இவர்கள் கீழே சென்றுவிடுவார்கள் என்று நினைத் தார்கள்... ஆனால், நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை! அதனால் உடனே நிதி தரமாட்டோம் என்று சொல்கிறார்கள்... நான் வேதனை யோடு சொல்கிறேன், பள்ளிக் குழந் தைகளுக்கு கல்வியைக் கொடுக் கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரு கிற நிதியில் கூட, கைவைக்கும் அள வுக்குக் கொடூரமானவர்கள் கையில் இந்தியா சிக்கியிருக்கிறது!
தருமமே இல்லாத தர்மேந்திரன்
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன சொல்கிறார்? “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடு விக்கப்படும். மும்மொழிக் கொள் கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை” என்று மிரட்டுகிறார்! நான் கேட்கிறேன், எந்தச் சட்டத் தில் இப்படி இருக்கிறது? மும் மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டமா அது? உங்க ளுக்கு ஒரு நீட் தேர்வையே குற்றச் சாட்டுகளுக்கு இடமளிக்காத வகை யில் நடத்தத் தெரியவில்லை. நீங்கள் தமிழ்நாட்டுக்கு அட்வைஸ் செய் கிறீர்களா? பெயர்தான் தர்மேந்திர பிரதான்! ஆனால், தருமமே உங்களி டம் இல்லையே!? நம்முடைய குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய, அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல், பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா? பிரதமர் அவர்களே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள்... எங்களுக்குத் தாய்மொழியான தமிழும் - உலகத் தோடு தொடர்பு கொள்ள ஆங்கில மும் போதும்... தேவைப்பட்டால் இந்தி என்ன? கிரேக்கம் - இலத்தீன் மொழிகளை கூட அறிவியல் - தொ ழில்நுட்பம் மூலம் கற்றுக் கொள்ளப் போகிறோம்...
எங்கள் பாதை இருவழி...
இன்றைக்குத் தமிழ்நாடு இப்படி வளர்ந்திருக்க காரணம், நாம் தேர்ந்தெடுத்த இருமொழிக் கொள்கைப் பாதை! இந்தச் செய்தி களை எல்லாம் எடுத்துச் சொல்லி, நான் முரசொலியில் கட்டுரை எழுதி, அதனை நான் டுவீட் போட்டால், எனக்கு வரும் பதில்களில், வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் நம்மு டைய நியாயத்தைப் உணர்ந்து, நமக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்... ப்ரித்திக் என்பவரின் ட்வீட் என்ன தெரியுமா? “தமிழ்நாடு முதல மைச்சர் சொல்வது சரிதான்... இந்தி மொழியால் என்னுடைய மைதிலி மொழி காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது” என்று எழுதி யிருக்கிறார்... அவின் என்பவர், “என்னுடைய தாய்மொழி மகதி! நான் ஸ்டாலினின் கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன். எங்களுடைய இளைய தலைமுறையால் மகதி மொழியைப் பேசவோ – புரிந்து கொள்ளவோ முடியவில்லை... இந்தித் திணிப்பைத் தடுங்கள்” என்று எழுதியிருக்கிறார்! இப்படி ஏராளமான பேர், இந்தி மொழி யின் திணிப்பால் தங்களின் தாய்மொ ழிகள் எப்படி பாதிக்கப்பட்டிருக் கிறது என்று எழுதியிருக்கிறார்கள்! இப்படி, அனைத்துக்கும் முன்னோ டியாகவும்- அனைவருக்கும் வழி காட்டியாகவும் இருப்பதுதான் நம்மு டைய தமிழ்நாடு!
அடக்குமுறையை எதிர்கொள்வோம்
எங்களை என்ன மிரட்டினாலும், உங்களால் இந்தி மொழியைத் திணிக்க முடியாது! மிரட்டினால், அஞ்சி நடுங்கிக் கூழைக்கும்பிடு போடுவதற்கு, அதிமுக என்று நினைத்தீர்களா? இது திமுக.! மிரட்டினால், அடங்கிப் போகிற வர்கள் இல்லை; அடக்க நினைப்ப வர்களை அடங்கிப் போக வைப்ப வர்கள்! தமிழ் நாட்டுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எத்தகைய அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் நாங்கள்! இங்கு இருக்கும் நாங்கள் தமிழர்கள்! சுயமரியாதையுள்ள தமிழர்கள்! ஒன்றிய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப் பூர்வமாக - முற்போக்குச் சிந்தனை யுடன் பேசுகிறார்களே! இங்கு மட்டு மல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே! இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த் தார்கள்... அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள்! நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை- நம்முடைய பிரதிநிதித்துவத்தை குறைக்க நினைக்கிறார்கள்... அத னால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம்.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்
மார்ச் 5 அன்று நடக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்... நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வ தெல்லாம், இன்றைக்கு பாஜகவை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழ்நாட்டுக்குத் தீங்கு தான் ஏற்படும்! பாஜகவை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடன் மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்... அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவினருக்கு சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்பு வது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட் டுக்குத் துணையாக நில்லுங்கள்... தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள்! நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும்! அது மூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்து தடுத்து, நம்மு டைய உரிமையை வென்றெடுக்க முடியும்! வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடி யும்! நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்! இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய் விடும்! எனவே,நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்... நாம் அனை வரும் ஒற்றுமையாக ஒரே அணியில் இருப்போம்! தமிழ்நாட்டின் உரி மைகளைப் பாதுகாப்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.