tamilnadu

img

நாடாளுமன்ற வீதியில் திரண்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தில்லியில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்ற வீதியில் திரண்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தில்லியில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்!

புதுதில்லி, ஜூன் 17- இஸ்ரேலின் இனப்படுகொலை யைக் கண்டித்தும், போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கும் வகையில், புதுதில்லி நாடாளுமன்ற வீதியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தின. நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், எழுத் தாளர்கள், கலைஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பயங்கரவாத பிரதமரும் தடித்தனமான இஸ்ரேல் அரசும் “இஸ்ரேல் ஒரு தடித்தனமான அரசு (rogue state)” என்றும்; “அதன் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஒரு பயங்கரவாதி” என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, ஆர்ப்பாட்டத்தில் பிரகடனம் செய்தார். “நேதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவுடன் இந்த அட்டூழி யங்களில் ஈடுபட்டு வருகிறார்” என்றும் தெரிவித்தார். “அண்மையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது  நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குத லுக்கும், ஈரான் மீது இஸ்ரேல் மேற் கொண்டுள்ள தாக்குதலுக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமா வது உண்டா?” என கேள்வி எழுப்பிய எம்.ஏ. பேபி, “இரண்டுமே மனிதத்தன்மையற்றவை, என்றும்; வன்முறையையும் அழிவையும் ஏற்படுத்திடும் பயங்கரவாதச் செயல்களே!” என்றும் கூறினார். பாலஸ்தீனர்களைக் கொல்லும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள்... “இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிர மிப்பு தாக்குதல்கள் குறித்து மோடி  அரசாங்கம் எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடிக்கிறது” என்று குற்றஞ் சாட்டிய எம்.ஏ. பேபி, அதானி குழு மத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடை யிலான கூட்டுச் சதித்திட்டத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதாவது, “ஹைதராபாத்தில் தயா ரிக்கப்பட்ட டிரோன்கள் இஸ்ரே லுக்கு வழங்கப்பட்டன” என்றும்; “அவைதான் பாலஸ்தீனம் மீதும் ஈரான் மீதும் ஏவப்பட்டு வருகின்றன” என்றும் கூறினார்.  “இத்தகைய ராணுவ ஆயுதங்களை வழங்குவதை இந்திய  அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும்” என்றும் எம்.ஏ. பேபி வலி யுறுத்தினார். அராபியர்களுக்குச் சொந்தமான பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும் பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக முன்மொழியப் பட்டிருந்த இரண்டு நாடுகள் தீர்வு (Two Nation Solution) இன்னமும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு அடிப்படை தீர்வாக விளங்குகிறது என்று கூறிய எம்.ஏ. பேபி, “பாலஸ் தீனம் அராபியர்களுக்கு சொந்த மானது. யூதர்களும், கிறித்தவர்களும் அமைதியுடன் அங்கே வாழ வேண்டும். எப்படி இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், மற்றவர்களும் வாழ்கிறார்களோ அப்படி வாழ்ந்திட வேண்டும்” என்று மகாத்மா காந்தி  கூறியதையும் மேற்கோள்காட்டினார். “இதற்கு நேர்மாறாக, இன்றைய சியோனிஸ்டுகள் (யூத இனவெறி யர்கள்) பாலஸ்தீன குழந்தைகளை சுட்டுக் கொன்று, அவர்களை எதிர்கால பயங்கரவாதிகள் என்று அறிவிக் கிறார்கள். பாலஸ்தீன மக்களின் போராட்டம் இந்துத்துவா சக்திகள் சித்தரிக்க விரும்புவது போல ஒரு  மத அல்லது இஸ்லாமியப் போர்  அல்ல, மாறாக பிரிட்டிஷ் காலனித்து வத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தைப் போன்ற ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கம்” என்று எம்.ஏ. பேபி தெளிவுபடுத்தினார். இந்த நிகழ்வில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செய லாளர் து. ராஜா, இந்தியக் கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் தலைவர்கள் உரையாற்றினர்.  (ந.நி.)