tamilnadu

img

கற்றலுக்கு மூளை தேவையில்லை - சிதம்பரம் இரவிச்சந்திரன்

கரீபியன் பாக்ஸ் ஜெல்லி மீன்களில் (Caribbean box jellyfish) நடத்தப்பட்ட கற்றல் பற்றிய ஆய்வு கற்பதற்கு மூளை யின் செயல்பாடு அவசியமில்லை என்று எடுத்துக்  காட்டுகிறது. நடத்தையில் இந்த உயிரினங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் கற்றல் என்பது நியூரான் நரம்புசெல்களின் ஒரு ஒருங்கிணைந்த செயல் என்பதை நிரூபிக்கிறது. இவை தங்கள் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள் ளனர்.

உடலின் இயக்கத்தில் கற்றல்

நரம்பு செல்கள் இயங்கும் விதத்தில் கற்றல்  ஒரு அடிப்படை செயல் என்று கண்டறியப் பட்டுள்ளது. மனிதர்களுக்கு இருப்பது போல இவற்றிற்கு மைய மூளை அமைப்பு இல்லை. ஆனால் இந்த வகை ஜெல்லி மீன்கள் நியூ ரான் திரள்களைப் பெற்றுள்ளன. இந்த உயிரி னத்தின் கண் போன்ற அமைப்புடன் தொடர்பு டைய ரொப்பாலியா (rhopalia)என்று அழைக்கப்  படும் பகுதி பார்வை தகவல் செயலாக்க அமைப் பாக (processing system) சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. நாய்களிடம் காணப்படும் பாவ்லவ் (Pavlov) என்ற பண்பைப் போல இவை இணைந்த கற்றல் (associative learning) என்ற செயல்முறையின் மூலம் கடந்தகால வாழ்க்கை அனுபவங்களில் இருந்து கற்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 1849-1936 வரை வாழ்ந்த ரஷ்ய  விஞ்ஞானி ஐவான் பாவ்லவ் (Ivan Pavlov) மணி  அடித்தவுடன் உமிழ்நீர் சுரக்கும் நாய்களின் நடத்தை யில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி முதல்முதலில் எடுத்துக்கூறினார். இதனால் இப்பண்பு பாவ்லவ் பண்பு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திறன் மிக சிக்கலான அமைப்புடைய முதுகெலும்பிகள் மற்றும் மொலஸ்க்ஸ் (mollusks)  என்ற பிரிவுகளற்ற மென்மையான ஓடால் மூடப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் போன்ற வற்றில் மட்டுமே காணப்படுகிறது. வாழ்வதற்கு கற்றல் அவசியமான உயிர்ச்செயல் என்பதால் ஜெல்லி மீன்களிடம் காணப்படும் இத்திறன் தங்க ளுக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வா ளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜெல்லி மீன்கள் பல காலங்களுக்கு  முன்பே பரிணாமரீதியில் தோன்றிய விலங்கினங்க ளில் ஒன்று என்பதால் இந்த வகைக் கற்றல் நரம்பு  செல்களின் ஓர் ஒருங்கிணைந்த செயலாக உள்ளது  என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்  காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற னர். கற்றுலுக்கு உயர்தர வளர்ச்சியடைந்த மூளை  தேவையில்லை. ஏனென்றால் இச்செயல் இந்த  உயிரினங்களிடம் நரம்பு செல்களிலேயே ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது என்று கீல் (Kiel) பல்க லைக்கழகத்தின் ஆய்வாளர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியர் டாக்டர் ஜேன் பீலெக்கி (Dr Jan Bielecki) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை கரண்ட் பயாலஜி (Current Biology) என்ற ஆய்விதழில் வெளி யிடப்பட்டுள்ளது. மீன்களின் நடத்தை பதிவு செய்யப்பட்டது. அவை பல பாணிகளில் அலங்க ரிக்கப்பட்ட நீர்த்தொட்டிகளில் விடப்பட்டன. பன்னிரண்டு மீன்கள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் வரையப்பட்ட தொட்டியிலும், ஏழு  மீன்கள் கறுப்பு வெள்ளைக்கோடுகள் வரையப் பட்ட தொட்டியிலும், எட்டு மீன்கள் வெறும் சாம்பல்  நிறம் மட்டுமே உள்ள தொட்டியிலும் விடப் பட்டன. கோடுகள் உள்ள தொட்டியில் அலையாத்திச் செடிகளின் வேர் போன்ற தோற்றமளிக்கும் பொருட்  கள் வைக்கப்பட்டன.

தடைகளை உணர்ந்த மீன்கள்

தங்களின் மென்மையான உடலிற்கு பாதிப்பு  வராமல் இருக்க மீன்கள் அவற்றின் இயற்கை யான வாழிடத்தில் இத்தகைய பொருட்கள் மீது அவை மோதாமல் இருக்கும் திறன் பெற்றவை . அத னால் இது போன்ற அமைப்புடன் தொட்டி உரு வாக்கப்பட்டது. கறுப்பு வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட தொட்டியில் இருந்த மீன்கள் அந்தக்  கோடுகளை அருகில் இருக்கும் தடைகளாக உணர்ந்ததால் அவை ஒருபோதும் பக்கவாட்டுச் சுவர்களில் மோதவில்லை. வெறும் சாம்பல் நிறம் மட்டுமே இருந்த தொட்டி யில் மீன்கள் அடிக்கடி சுவர்களில் மோதிக்கொண் டன. ஆனால் சாம்பல் நிறக் கோடுகள் வரை யப்பட்ட மற்றொரு தொட்டியில் இருந்த மீன்கள்  ஆரம்பத்தில் சுவர்கள் மீது மோதின என்றாலும் இந்த நடத்தை 7.5 நிமிட நேரத்தில் படிப்படியாகக் குறைந்தது. அவை ஒவ்வொரு நிமிடத்திற்கும் 50% என்ற அளவில் தங்கள் நடத்தையை மாற்றிக்  கொண்டன. சாம்பல் கோடுகளை மீன்கள் ஆரம்பத்தில் தொலைவில் உள்ள தடையாக கருதின. விரை விலேயே கோடுகள் சுவர்களில் மோதும் வாய்ப்பை  அதிகரிக்கச்செய்யும் என்பதை அவை கற்றுக்கொண்டன. மற்றொரு ஆய்வில் மீனின்  ரொப்பாலியா மற்றும் அதனுடன் தொடர்புடைய நியூரான்கள்  நீக்கப்பட்டன. இந்த அமைப்பு நக ரும் சாம்பல் நிறக் கோடுகளுடன்  இருக்கும் தொட்டி யில் விட்டு ஆராயப்பட்டது. அப்போது நியூரான் களில் எந்த பதில் வினையும் நிகழவில்லை. ஆனால் இதே அமைப்பை ஒரு மோதல் நிகழ்வு  போல போலியாக ஏற்படுத்தி மின்சாரம் பாயும்  போது திடீரென்று உடலில் ஏற்படும் வலியுணர்வை  உருவாக்கும் மின்னமைப்புடன் (Electrical Zap) இணைத்து ஆராய்ந்தபோது நியூரான்களில் பதில்  வினை  ஏற்படுவது கண்டறியப்பட்டது. அவற்றின்  நீந்தல் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. தடைகள்  மீது மோதாமல் இருக்க அப்போது மீன்களின் நரம்பு செல்களில் இருந்து சமிஞ்ஞைகள் அனுப் பப்பட்டதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று  விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கற்றல் மையம் இந்த உயிரினங்களில் ரொப்  பாலியாவிலேயே அடங்கியுள்ளது. இது பார் வைப்புலன் மற்றும் இயந்திரத் தூண்டல்களின் ஒருங்கிணைந்த செயலால் நிகழ்கிறது. கற்றலுக்கு ஒரு சில அல்லது ஒரே ஒரு நரம்பு செல்லே போது மானது என்று குழுவினர் கூறுகின்றனர். பல காலங்க ளுக்கு முன்பே தோன்றிய ஜெல்லி மீன்கள் போன்ற  விலங்குகளின் கற்றல் மற்றும் அவற்றின் நடத்தை பற்றிய இந்த ஆய்வுகள் உயிரினங்களின் அதிச யிக்கத்தக்க வாழ்க்கைமுறை பற்றிய புதிய புரி தலை நமக்கு ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.