tamilnadu

img

சுரண்டல் ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம்

சென்னை, மே 1- சுரண்டல் ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் என சென்னையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஏ.கே.பத்மநாபன் அறைகூவல் விடுத்தார். இந்தியாவில் முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி பொதுவுடமை இயக்க சிற்பி மா.சிங்காரவேலர் செங்கொடியை ஏற்றி கொண்டாடினார். அதன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலக் குழு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (மே 1) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், 1923ஆம் ஆண்டு தோழர் சிங்காரவேலர் மெரி னாவில் கொடியேற்றியதன் நூற்றாண்டை  சிறப்பிக்கும் வகையில் அவருடைய சிந்த னைகளை, பணிகளை முன்னெடுப்போம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, 8 மணி நேர வேலை,  வருங்கால வைப்பு நிதி என்ற கோரிக்கையை  முன்வைத்தவர். 320 பவுண்ட் அரிசி அல்லது கோதுமை ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்திற்கு வழங்க வேண்டும், 10 ஜோடி வேட்டி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தவர் தோழர் சிங்காரவேலர் எனக் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு அரசியல் தேவை

தொழிலாளர்களுக்கு அரசியல் தேவை என்பதை உணர்ந்து ‘தொழிலாளர் விவ சாயக் கட்சி’யை துவக்கினார். அதை யொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், உணவு, உடை, வீடு இவற்றிற்காக உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே அதன் கொள்கைகள், கோரிக்கைகள் சரியானதாக இல்லை என்று கூறினார். அதற்கு மாற்றாக உழைப்பாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முன்னெ டுக்க வேண்டும் என ஏ.கே.பத்மநாபன் கூறினார்.

வாக்களிக்கும் உரிமை

அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்று போராடினார்.  நாட்டில் உள்ள விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்று சிங்காரவேலர் அறைகூவல் விடுத்தார். போராடிப் பெற்ற அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளை யும் ஒன்றிய மோடி அரசு பறித்து வரு கின்றது. சுரண்டலற்ற இந்தியா, சோசலிச இந்தியா உருவாக; மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க அனைத்து பகுதி தொழிலாளர் களையும், விவசாயிகளையும் திரட்டி சுரண்டல் ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று பத்மநாபன் அழைப்பு விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சிஐ டியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன்,  டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், தலைவர் தி.ஜெய்சங்கர், அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செய லாளர் கே.ஆறுமுக நயினார், மாநகர போக்கு வரத்து கழக பொதுச் செயலாளர் வி.தயான ந்தம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.செல்வா, ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.