tamilnadu

img

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

திருவட்டார், ஜுலை 6- கன்னியாகுமரி மாவட்டம் திரு வட்டாரில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்க ராஜ் உட்பட சாதி மதங்களைக் கடந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். திருவட்டாறில் 108 வைணவத் தலங் களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந் தும் கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 1604 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றதாக கல்வெட்டு குறிப்புகள் உள் ளன. 418 ஆண்டுகளுக்குப் பிறகு புத னன்று (ஜுலை 6)  கும்பாபிஷேகம் நடந் தது. இதற்காக கோவில் புனரமைக்க ப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடந்தன. கோபுரக் கலசங்கள், கொடி மரங்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டன.

இரவில் குவிந்த பக்தர்கள்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29  ஆம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. கலச பூஜை, சிறப்புப் பூஜைகள், அன்னதானம் என நாள்  தோறும் நடைபெற்றன. 5 ஆம் தேதி  கொடிமரத்தில் தங்கக் கவசம் சாத்தப் பட்டது. தொடர்ந்து கோபுரத்தில் தங்கக்  கலசங்கள் பொருத்தப்பட்டன. கும்பாபி ஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள்  செவ்வாயன்று இரவே கோவிலில் குவி யத் தொடங்கினர். குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷே கம் அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி யது. பல்வேறு பூஜைகளுக்கு பிறகு காலை 6 மணிக்கு புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களுக்கு வழிபாடு நடைபெற்றது. 6.19 மணிக்கு புனித நீர்  கலசங்களை எடுத்துக் கொண்டு நம்பூதி ரிகள் கோபுரத்திற்குச் சென்றனர். 6.26 மணிக்கு கோவில் கருவறை பகுதியில் உள்ள 5 கோபுரக் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள மேலும் 2 கோபுர தங்கக் கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதும் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. பெண்கள் குலவை யிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கோபுரக் கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவை காண வந்த பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத் திற்கு நின்றனர். அவர்கள் கும்பாபிஷே கத்தை கண்டுகளிக்கும் வகையில் திருவட்டாறில் ஆங்காங்கே அகன்ற திரை டி.வி. வைக்கப்பட்டு, கும்பா பிஷேக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது மழை பெய்தது. ஆனாலும் அதனை பொருட் படுத்தாமல் பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, த.மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உட்பட லட்சக்கணக் கானோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக கோவிலில் கம்புகள் மூலம்  குறிப்பிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாது காப்புப் பணியில் உள்ளூர் காவல்துறை யினர் மட்டுமின்றி வெளிமாவட்டத் தினரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மதச்சார்பின்மையை நிலைநாட்டிய விழா

திருவட்டாறு குலசேகரம் சாலை யில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட தால் பேருந்துகளும் தனியார் வாக னங்களும் மாற்று பாதையில் விடப் பட்டன. இப்பகுதியில்  கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் ஆலயங்கள் சார்பாக  கும்பாபிஷேகத்திற்கு வரும் அனை வரையும் அன்புடன் வரவேற்பதற்காக ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைத்து வர வேற்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவட்டார் வட்டாரக்குழு சார்பில் வரவேற்பு அளித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் கூறுகையில், நான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் உபயதாரர் மூலமும் அரசு மூலமும் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோ வில் பணிகள் நடைபெற்றன. விரை வில் பணி முடித்து கும்பாபிஷேகம் நடத்திட கோரிக்கை வைத்திருந்தேன். இன்று அந்த விழா வேறு மதத்தவர் கள் பங்கேற்கக் கூடாது என்ற சர்ச்சை களுக்கு மத்தியில் நீதிமன்றம் தலை யிட்டு எல்லோரும் பங்கேற்கலாம் என்ற மதச்சார்பின்மையை நிலைநாட்டும் விழாவாக சகோதரத்துவ விழாவாக அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.