குமரி மாவட்ட மாதர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மார்ச் 8 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு யூஜின் அமலோர் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர் சகுந்தலா வரவேற்றார். கூட்டுக்குழு தலைவர் என்.உஷா பாசி துவக்கவுரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா சிறப்புரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ், மேரி இந்திரா, ரெஜீஷா, சித்ரா, கஜா ஜாஸ்மின் ஆகியோர் பேசினர்.