tamilnadu

img

சமூக நீதிக்கான சமர்க்களத்தில்... கொடியன்குளம் கொடூரம்: நீதிகேட்டு நிமிர்ந்த செங்கொடி

கொடியன்குளம் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தாலு காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத் தில் மிக கணிசமான அளவில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இக்கிராம மக்கள் ஒப்பு நோக்கின் பொரு ளாதாரத்தில் சற்று உயர்ந்துள்ளனர். இதற்கு காரணம் இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளி லும், கோவை, திருப்பூர் போன்ற வெளியூர்களி லும் பணியாற்றி தங்கள் குடும்ப பொருளா தாரத்தை உயர்த்தியுள்ளனர். இச்சூழலில்தான் இக்கிராமத்தை குறி வைத்து காவல்துறையினர் கொடூரமான தாக்குதலை நடத்தினர். ஆம், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் இத்தாக்குதல் நடந்தது. ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட போலீ சார் அணிவகுத்து திடீரென கிராமத்திற்குள் நுழைந்தனர். இம்மக்கள் குடியிருக்கும் வீடுகள், அவர்களின் விலையுயர்ந்த உடமை கள் குறிவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கணிச மாக வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் பணியாற்றுகிற நிலையில் மிகச் சில இளை ஞர்களே அன்றைய தினம் அக்கிராமத்தில் இருந்துள்ளனர். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளனர். காவல்துறையினர் இவர்கள் ஒவ்வொருவரையும் கடுமையாக தாக்கினர். அடி, உதை இல்லாத எவரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தாக்குதல் கொடூர மாக இருந்துள்ளது. பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடந்த மறுநாள் இரவு வீட்டில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, தொலை பேசி அலறல் என்னை விழிப்படையச் செய் தது.

தொலைபேசியை எடுத்து ஹலோ என்று நான் அழைத்தபோது எதிர் தரப்பில் “ஐயா வணக்கம், நான் கொடியன்குளத்திலிருந்து பேசுகிறேன், நூற்றுக்கணக்கான போலீசார் எங்கள் ஊருக்குள் புகுந்து நேற்றைய தினம் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஊரில் பெண்கள், பெரியவர்கள், குழந்தை கள் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் அனை வரும் தாக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் சேதப்படுத்தப்பட் டுள்ளன. இத்தனையும் செய்துவிட்டு போலீ சார் எங்கள் கிராமத்தை சுற்றி வளைத்துள்ள னர்” என நடந்த விபரங்களை பதட்டத்துடன் கூறினார். கூடவே, நீங்கள் உடனடியாக எங்கள் ஊருக்கு வர வேண்டும் எனவும் அழைத்தார். எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. “என்ன காரணத்திற்காக தாக்கினார்கள்” எனக் கேட்டேன். “தெரியவில்லை ஐயா, நீங்கள் உடனடியாக வர வேண்டும்” என மீண்டும் கூறினார். போலீசார் ஊரைச் சுற்றி வளைத்திருப்ப தாக கூறுகிறீர்கள், நாங்கள் வந்தால் அனுமதிப் பார்களா எனக் கேட்டேன். அதற்கு ஒரு வழி இருக் கிறது. ஊருக்குள் உங்களை அழைத்துச் செல்வது எங்கள் பொறுப்பு என்றார். சரி வரு கிறோம் என பதிலளித்துவிட்டு அதற்கான வழி என்ன என்பது குறித்து யோசித்தேன். மறுநாள் காலையில் நாங்கள் ஒரு குழு வாக கொடியன்குளம் செல்ல ஒரு காரில் புறப்பட்டோம். என்னுடன் கே.பொன்ராஜ், எஸ்.கே.மகேந்திரன், ஆர்.மல்லிகா, டி.குமாரவேல், கே.எஸ்.அர்ச்சுனன், கே.பி. பெருமாள் ஆகியோர் வந்தனர். பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் நிருபரையும் எங்களுடன் சேர்த்து அழைத்துக் கொண்டோம்.

அவரும் வருவதில் ஆர்வம் காட்டினார். வழி நெடுக காவல்துறையினர் ஆங்காங்கே அரண் போல நின்று கொண்டி ருந்தனர். அவர்களை சமாளித்து கடந்து செல்வது சவால் நிறைந்த பணியாகவே இருந் தது. ஒரு வழியாக நாங்கள் கொடியன்குளம் அருகே இருந்த புளியம்பட்டி என்ற ஊரை அடைந்தபோது, போலீசார் எங்களை வழி மறித்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்து கொண்டே வேகமாக நாங்கள் நகர்ந்து விட்டோம். அங்கிருந்து சில கிலோ மீட்டர் கடந்தபோது, சாலையில் கொடியன்குளத்தை சேர்ந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அங்கிருந்து கீழே இறங்கி ஒற்றை யடிப் பாதை வழியாக ஒரு முள் வேலியை கடந்து கொடியன்குளத்திற்குள் புகுந்து விட்டோம். ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில் தாக்குதல் நடந்த பிறகு அக்கிராமத்திற்கு சென்ற முதல் குழுவினர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாங்கள் தான். தாக்குதலுக்கு உள்ளான மக்கள் ஆங்காங்கு சிதறி நின்று கொண்டிருந்தனர். எங்களை கண்டதும் மிகுந்த கதறல்களுடன் திரண்டு வந்து முறை யிட்டனர். காவல்துறையினரால் தாங்கள் தாக்கப்பட்ட விபரங்களை அடுக்கடுக்காக அழுது புலம்பிக் கொண்டே அவர்கள் விவ ரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு டி.எஸ்.பி சில காவலர்களுடன் எங்களை நோக்கி வந்து “ஊருக்குள் வர தடை உத்தரவு இருக் கிறது.

நீங்கள் எவ்வாறு வரலாம்?, உங்களை முகாமில் உள்ள எஸ்.பி. அழைக்கிறார். வாருங்கள்” என்று அழைத்தார். நான் டி.எஸ்.பி-யிடம் “ஊரையே அடித்து நொறுக்கிவிட்டு உலை மூடி போட்டு மறைக்க நினைக்கிறீர்களா? நாங்கள் ஒரு ஜனநாயக இயக்கத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்துள்ளோம். மக்களை சந்தித்துவிட்டு எஸ்.பி யை காண வருகிறோம்” என்று கூறினேன். முதலில் எஸ்.பி யை சந்திக்க வாருங்கள் என்று மீண்டும் அவர் அழைத்த போது, கூடியிருந்த மக்கள் கூட்டாக குரல் கொடுக்கவே அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். நாங்கள் ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்தோம். நாங்கள் பார்த்த கோர காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. *    போலீசார் திடீரென கும்பலமாக புகுந்து மக்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி யுள்ளனர். துப்பாக்கிச் சூடும் நடந் துள்ளது.  *    ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புகுந்து தாக்கியுள்ளனர். மக்களை தாக்கியுள்ள தோடு வீட்டிலிருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், கேஸ் அடுப்பு, வாஷிங்மெஷின் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை யும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, அவர்களது சாதியைச் சொல்லி இழிவாக பேசி, உங்களுக்கு காரை வீடு, கட்டில், மெத்தை, பீரோ கேட்கிறதா? விலை உயர்ந்த பொருட்கள் வேண்டுமா? எனச் சொல்லிக் கொண்டே அவற்றை அடித்து நிர்மூலமாக்கினர். *    வீடுகளில் சமைத்து வைத்திருந்த உண வில் மண்ணெண்ணெயை ஊற்றினர். குடிதண்ணீர் கிணறுகளில் பூச்சிக் கொல்லி மருந்தை கொட்டியுள்ளனர். *    கிராமத்தில் வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளும் தாக்குதலில் தப்பவில்லை.  

7 மணி நேரம் நாங்கள் அக்கிராமத்தில் இருந்தோம்.  சிபிஐ(எம்) குழுவினர் அவர் களை சந்தித்தது - குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. அப்போது தமிழக அதிகாரத்தில் இருந்தது ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு தான். கொடி யன்குளம் தாக்குதல் தமிழக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அஇஅதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகளை தமிழக ஜனநாயக இயக்கங்கள் பெரிதும் கண்டித்தன. ஜெயலலிதா அரசை மக்களிடமிருந்து தனி மைப்படுத்துவதில் கொடியன்குளம் காவல் துறை தாக்குதலுக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு. 1996இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அரசு படுதோல்வி அடைந்தது.  கொடியன்குளத்திலிருந்து நாங்கள் புறப்படும்போது காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலையும், அதிமுக அரசின் அத்துமீறல்களையும் தமிழக மக்கள் மத்தியில் விரிவாக கொண்டு செல்வோம் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றும் மக்களிடம் உறுதிபட எடுத்துச் சொன்னோம். எங்கள் வருகையைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ண சாமியும் கோவையிலிருந்து கொடியன்குளம் வந்து சேர்ந்தார். அவர் அம்மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்ததோடு அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்தார் (அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி எந்த அமைப்பையும் அல்லது அரசியல் கட்சியையும் துவக்கி இருக்கவில்லை). கொடியன்குளம் மக்களை சந்தித்து விட்டு நாங்கள் நேரிடையாக எஸ்.பி. தங்கி யிருந்த முகாமிற்கு சென்றோம். அங்கு எஸ்.பி.யை சந்தித்தோம்.

அவரோ “காவல் துறை தடையை மீறி கொடியன்குளத்திற்குள் நுழைந்துள்ளீர்கள், உங்களிடம் பேச என்ன இருக்கிறது” என ஆத்திரத்துடன் வினவினார். நாங்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினோம். தூத்துக்குடி திரும்பிய நாங்கள் கொடியன்குளத்தில் காவல்துறை நடத்திய அட்டூழியங்களையும், தாக்குதலையும் அறிக்கை வெளியிட்டு பத்திரிகைகள் வாயி லாக அம்பலப்படுத்தினோம். பல்வேறு பத்தி ரிக்கைகளும் அச்செய்தியை வெளியிட்டன. நாங்கள் அழைத்து சென்றிருந்த பிரபல ஆங்கில பத்திரிகை நிருபர் தகுந்த புகைப் படங்களுடன் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தார். கொடியன் குளம் தாக்குதல்கள் பற்றி பத்திரிகைகள் மற்றும் இதர வழிமுறைகளில் மக்களிடம் முதலாவதாகவும், விரிவாகவும் அம்பலப் படுத்திய இயக்கம் சிபிஐ(எம்) என்பதை எவரும் மறுக்க முடியாது.  மேலும், சிபிஐ(எம்) மாநிலத் தலைவர்கள் கே.ரமணி, கே.பாலபாரதி, தம்புசாமி எம்.எல்.ஏ ஆகியோர் கொடியன்குளம் வந்திருந்து பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கை யும் அளித்தனர். இப்பிரச்சனை பின்னர் சட்ட மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்சனையில் சிபிஐ(எம்) உள்பட பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலையீடுகள், மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக ஜெயலலிதா அரசு கோமதிநாயகம் என்ற நீதிபதியை ஒரு நபர் விசாரணை கமிஷனாக நியமித்தது. தமிழக அதிமுக அரசிடம் நியாயம் கிடைக்காது என்பதால், அந்த விசாரணை கமிஷனை சிபிஐ(எம்) உள்பட பல ஜனநாயக இயக்கங்கள் நிராகரித்து புறக்கணித்தன. அடுத்து, கொடியன்குளத்தில் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும், இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்ய உத்தரவிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அன்றைய சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் பி.சம்பத் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமியும் இத்தகையை மனுவை தாக்கல் செய்திருந்தார். இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கொடியன்குளம் போலீஸ் தாக்குதல் குறித்து சிபிஐ விரிவான விசாரணைகளை நடத்தியது. சிபிஐ அதிகாரி கள் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் பி.சம்பத்-ஐ விசா ரணைக்கு அழைத்தனர். சம்பத் விசாரணையில் கலந்து கொண்டு கொடியன்குளத்தில் போலீஸ் நடத்திய தாக்கு தலை விரிவாக விவரித்தார்.

அவரிடம் சிபிஐ அதிகாரி கள் குறுக்கு விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 2 மணி நேரம் விசாரணை நடந்தது. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதில் தோழர் பி.இசக்கிமுத்துவின் பாத்திரம் முக்கியமானதாகும். கொடியன்குளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதில் சிபிஐ(எம்) மற்றும் பல ஜனநாயக அமைப்புகள் பெரும்பங்காற்றின. இத்தகைய நிவாரண உதவிகளை - பொருட்களை திரட்டுவதில் தோழர் தேவப்பிரகாஷ் பெரும்பங்காற்றினார். இதற்காக சில முறை அவர் எங்களுடன் கொடியன்குளம் வந்திருந்தார். கொடியன்குளம் மற்றும் இதர பல பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சிபிஐ(எம்) செய்த தலையீடுகள், நிவாரண உதவிகள், நடத்திய வழக்குகள், எடுத்துக் கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. கொடியன்குளத்திற்கு வெளியே ஒட்டப்பிடாரம் தாலுக்காவின் பல கிராமங்களில் மக்கள் மத்தியில் சிபிஐ(எம்) மரியாதை உயர்ந்தது. பல கிராமங்களில் கட்சி அமைப்புகளும், வர்க்க வெகுஜன ஸ்தாபன அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. பல புதிய ஊழியர்களும் கிடைத்தார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றும் சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சார்ந்தவர்கள். கொடியன் குளம் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சிபிஐ(எம்) தலையீடு இவர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கத்தாலும் இக்காலத்தில் சங்க தலைமை எடுத்துக் கொண்ட இதர பல முயற்சிகளாலும் இவர்களில் பலரும் துறைமுகத்தில் செயல்பட்ட ஹார்பர் டாக் ஒர்க்கர்ஸ் யூனியனில் (சிஐடியு) இணைந்த னர். நிர்வாகம் இச்சங்கத்திற்கு அங்கீகாரம் தர மறுத்தது. இச்சங்கம் பலமடைந்த பின்னணியில் நிர்வாகம் அங்கீ காரம் வழங்கியது. இச்சங்கத்தின் தலைவராக பி.சம்பத், பொதுச் செயலாளராக கே.பாலச்சந்திரன் செயல்பட்ட னர். துறைமுக தொழிலாளர்கள் பலரும் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் களாக மாறினர். வேறு பல புதிய தோழர்களும் கிடைத்தார்கள்.

தற்போதைய ஒட்டப்பிடாரம் தாலுகா சிபிஐ(எம்) செயலாளர் தோழர் ஆறுமுகம், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் அக்காலத்தில் நம் இயக்கத்திற்கு கிடைத்த ஊழியர்களாவர். இக்காலத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றது. அத்தேர்தலில் சிபிஐ(எம்) சார்பாக ஒரு மாவட்ட கவுன்சிலருக்கும், 8 ஒன்றிய கவுன்சிலர்களுக் கும் ஒட்டபிடாரம் தாலுகாவில் சிபிஐ(எம்) சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பலரும் வியக்கும் வண்ணம் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் விஜயா வெற்றி பெற்றார். மேலும் ஒரு ஒன்றிய கவுன்சிலராக பார்வதி ரத்தினம் வெற்றி பெற்றார். 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்க ளில் இரண்டாவதாக வந்தோம். போட்டியிட்ட இதர ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் கணிசமான வாக்கு களை பெற்றார்கள். இன்றளவும் ஒட்டபிடாரம் தாலுகாவில் சிபிஐ(எம்) ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக திகழ்கிறது என்றால் அதற்கு கொடியன்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிபிஐ(எம்) தலையீடுகளும் பிரதான காரணமாகும் என்பதில் ஐயம் இல்லை.