கேரள மருத்துவர் பலி
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்து வர் அஜ்சல் சைன் (26), ஃபாத்தில் (27) ஆகிய இரு வரும் முறையான அனு மதி பெற்று ஞாயிறன்று மலையேற்றத்தில் ஈடுபட்ட னர். மலைப்பாதை வழி காட்டிகளும் உடனிருந்த னர். அவர்கள் மாலை 4.30 மணியளவில் மலை அடி வாரத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் நீரிழப்பு காரணமாக அஜ்சல் மயக்கமடைந்தார். உடனே வேட்டைக்காரன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரி சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் அஜ்ச லின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, ஆனை மலை காவல்துறையில் புகார் அளித்தனர்.
நிலக்கரி தர மறுப்பு
சென்னை: எண்ணூர் விரிவாக்க மின் திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி யின் கீழ் தொடங்கினால், நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது. மேலும், எண்ணூர் விரிவாக்க மின் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தினால் மட்டுமே நிலக்கரி ஒதுக்கப் படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரி யமே இத்திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்துள்ளது.
3 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு
சென்னை: கோடை காலத்தையொட்டி, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு– ஒகேனக்கல், மைசூர்-பெங்களூரு மற்றும் மூணார் உள்ளிட்ட மலை வாழிடங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன் பதிவுகள் நடைபெற்று வரு கின்றன என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.