tamilnadu

img

மாநில உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டத்தை காக்க முடியும்!

சென்னை, நவ. 20 - மாநில உரிமைகளை பாது காப்பதன் மூலமே அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், நீட், கியூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், இந்தி திணி ப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஞாயிறன்று (நவ.20) சென்னையில் மாநில அளவி லான சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நீதிபதி அரிபரந்தாமன், ‘அரசியல் சாசன பாதுகாப்பும், மாநில உரிமை யும்’ எனும் தலைப்பில் உரை யாற்றினார். அப்போது, “இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் உலகி லேயே அதிக முறை திருத்தப்பட் டுள்ளது. இந்த திருத்தங்கள் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகை யில் அமையவில்லை. பாஜக ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆட்சி நடத்த முயற்சிக் கின்றனர். அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக செயல்படுகின்றனர். கல்வி தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்பு தல் தர மறுக்கின்றனர்” என்றார். “ஒத்திசைவுப் பட்டியல் நடை முறையில் ஒன்றிய அரசின் பட்டி யலாக மாற்றப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு வலுவாக அமைகிற போதெல்லாம், அரசியலமைப்பு சட்ட த்திற்கு அச்சுறுத்தல் அதிகமாகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முர ணாக நீதிபதிகளே கருத்து தெரி விக்கின்றனர்” என்று குறிப்பிட்ட அவர், “அரசமைப்பு சட்ட பாது காப்பது என்பது மாநில உரிமைகளை உறுதி செய்வதாகவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சார்ந்த 80 விழு க்காடு மக்களின் உரிமைகளை பாது காப்பதாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

ஆயிஷா நடராஜன்

‘கல்வியின் நோக்கமும், இலக்கும்’ எனும் பொருளில் பேசிய கல்வியாளர் ஆயிஷா நடராஜன், “இந்திய மாணவர் சங்கத்தின் ரத்தத்தில் உருவான கல்வி உரிமைச் சட்டத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பாசிச வெறி கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கின்றனர். கோத்தாரி கல்விக் கொள்கை இந்தி யாவை சமூகம் என்றும், கல்வியை சேவை என்றும் வரையறுக்கிறது. இதற்கு நேர்மாறாக புதிய கல்விக் கொள்கை இந்தியாவை சந்தை என்றும், கல்வியை முதலீடு என்றும்  வரையறை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை களே தவறாக உள்ளது” என்றார். “தாய் மொழியையும் கற்க வைத்து, அனைத்து தரப்பினரையும் இணைத்து, அனைவருக்கும் கல்வி கொடுத்து, வேலைவாய்ப்பை தரக் கூடியதாகவும், அன்றாட போராட் டத்தை சந்திப்பதற்கான கோத்தாரி  வழியில் நமது கல்வி கொள்கை அமைய வேண்டும். அதனடிப்ப டையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“2014ம் ஆண்டு 12 விழுக்காடாக இருந்த கல்வி தனியார்மயம், தற்போது 64 விழுக்காடாக உயர்ந் துள்ளது. 160 பல்கலைக் கழகங் கள் இந்தியாவிற்கு நுழைய விண்ண ப்பித்துள்ளன. அதில் 18 பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் வந்து விட்டன. இதன் காரணமாக இந்திய கல்வி எவ்வாறு வியாபாரமாக மாற ப்போகிறது என்பதை புதிய கல்விக் கொள்கை வரையறுக்கிறது. இதை எதிர்த்து தற்போது நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தை தொடர் வோம்.” என்றும் அவர் தெரிவித்தார். மாநில கல்விக் கொள்கை காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் கல்வி நிலையங்களில் நடைபெறும் மதவெறி பிரச்சா ரங்களை தடுக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழியை சேர்ந்த அனைத்து மாண வர்களுக்கும் பாட புத்தகம், சீருடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த சாமி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் சி.மிருதுளா வர வேற்றார். கல்வியாளர் முனைவர் அருணா ரத்தினம், அகில இந்திய தலைவர் வி.பி.சானு, மாநிலச் செயலாளர் க.நிருபன்சக்கரவர்த்தி மற்றும், தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை பரந்த பார்வையுடனும், அனைவரின் பங்களிப்புடனும், பொது கல்வியை வலுப்படுத்தும் வகையில்  அமைய ஆய்வறிக்கை களை சமர்ப்பித்து மாநில நிர்வாகிகள் ரா.பாரதி, வே.அருண்குமார், மி.காவ்யா, முகேஸ், கா.பிருந்தா, தே.சரவணன், ப.க.புகழ்ச்செல்வி உள்ளிட்டோர் பேசினர். கீர்த்திராஜன் நன்றி கூறினார்.