tamilnadu

அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஜுலை 9 - ரயில் மறியல் போராட்டம்!

அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஜுலை 9 - ரயில் மறியல் போராட்டம்!

 விவசாயிகள்- விவசாயத்  தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மாணவர் சங்கங்கள் அறைகூவல்

சென்னை, ஜூன் 27 - தொழிற்சங்க உரிமை, தொழி லாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கள் ஜூலை 9 அன்று  நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.  இந்நிலையில், இந்திய தொழி லாளர் வர்க்கம் நடத்தும் இந்த மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக- ஒன்றிய அரசு அலு வலகங்களையும், ரயில்களையும் மறித்து போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர்கள், வாலிபர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் வியாழன் (ஜூன் 26) அன்று திருச்சியில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி. நடராஜன், கே.பி. பெரு மாள், பி. டில்லிபாபு முன்னாள் எம்.எல்.ஏ, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஏ. லாசர் முன்னாள் எம்.எல்.ஏ, எம். சின்னதுரை எம்.எல்.ஏ, வீ. அமிர்தலிங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் எஸ். வாலண்டினா, அ. ராதிகா, வாலிபர் சங்கம் சார்பில் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய மாண வர் சங்க மாநிலச் செயலாளர் கோ.  அரவிந்தசாமி, வாலிபர் சங்க மாநி லச் செயலாளர் ஏ.வி. சிங்கார வேலன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஒன்றிய அலுவலகங்களை மறித்துப் போராட்டம்

இக்கூட்டத்தில் முடிவாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலாளர் விரோத சட்டங் பளை நீக்கக் கோரி மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் 2025 ஜூலை 9 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புக் கள், ஜுலை 9 பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மேலும், அன் றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மேற்கண்ட அமைப்புகளின்சார்பில் ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு காவு தரப்படும் இந்திய விவசாயம்

இடுபொருட்களின் விலை உயர்வு களால் வேளாண் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும் பகுதி விவசாயிகள் கடனாளிகளாகி விட்டனர். ஆட்சிக்கு வந்தால் விவசாயி களின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வேன் என்ற மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை கள் அதிகரித்துள்ளன. உற்பத்திச் செல வுடன் ஐம்பது சதவீதம் சேர்த்து விளை பொருட்களுக்கு விலை நிர்ணயித்திட வேண்டும் என்ற சுவாமிநாதன் குழுவின்  பரிந்துரையை ஒன்றிய அரசு அமல்படுத்த வில்லை. மாறாக, விவசாயிகள் போராட்டங் களுக்கு பணிந்து ரத்து செய்த வேளாண்  விரோதச் சட்டங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி தலை மையிலான பாஜக அரசு கொள்ளைப்புற வழியாக திரும்பவும் கொண்டு வர முயற்சித்து வருகிறது. புதிய விவசாய சந்தை என்ற பெயரில்  நமது நாட்டு விவ சாயத்தை, வேளாண் சந்தைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்திடும் கொள்கைகளை பாஜக அரசு செயல்படுத்துகிறது. அமெரிக்காவிடம் இந்தியா சரணடை கிறது, அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வந்து தடையற்ற இறக்குமதிக்கு  பேசிச் சென்றார். இந்திய விவசாயத்தை, விவசாயிகளை சீரழிக்கும் கொள்கை களையே ஒன்றிய அரசு அமல்படுத்து கிறது.

 தீவிர தனியார்மயத்தால் வேலையின்மை - வறுமை

கிராமப்புறங்களில் வேலை நாட்கள் குறைந்து வறுமையும் ஏழ்மையும் அதி கரித்து வரும் சூழலில், தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை பலப்படுத்துவதற்கு பதிலாக நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி (MNRGEA) திட்டத்தையே மோடி அரசு சீர்குலைக் கிறது. பணி செய்தவர்களுக்கு பல்லா யிரக்கணக்கான கோடி ரூபாய்களை தர மறுத்து வருகிறது. இது கிராமப்புறங் களில் ஏழ்மையை அதிகரித்திடச்செய்யும். மேலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடத்தில் விற்கின்றனர். தேசத்தின் பொதுச் சொத்துக்களை சூறையாடுகின்றனர். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு  புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்ற பாஜகவினரின் ஆட்சியில், வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களாக அத்துக் கூலிக்கு உழைப்புச் சுரண்டலுக்கு மோடி அரசு சட்ட அங்கீகாரம் கொடுக்கிறது. உதாரணமாக அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான பணியால் நாட்டின் பாதுகாப்புத் துறையே பாதிக்கப்பட்டுள்ளது.  ஊதியம் வீழ்ச்சி அடைந்து வரு வதால் வறுமையும், ஏழ்மையும் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்கிட மோடி அரசு  நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய வற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் குறைத்து கார்ப்பரேட்டுகள், பெரும் நிறு வனங்கள் லாபம் ஈட்ட வரிச் சலுகை களையும், வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுகிறது.  

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறைகள் அதி கரித்து, பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. பாதிக்கப்பட்ட பெண் களுக்கான நிர்பயா நிதி அதிகப்படுத்தப் படவில்லை. சைபர் கிரைம் குற்றங்கள் மேலும் அதிகரித்துள்ளன. சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த இதுவரை சிறப்பு சட்டம் இயற்றப்பட வில்லை. கல்வி மேலும் மேலும் தனியார் மயப்படுத்தப்படுகிறது. அரசு கல்வி நிறுவனங்களை பாதுகாத்து, மேம்படுத்திட ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு உதவ மறுக்கிறது. மாநில உரிமைகளை பறித்து தேசிய கல்விக் கொள்கை 2020 திணிக்கின்றனர். எனவே, உழைக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நாட்டில் அமல்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 2025 ஜுலை 9 அன்று ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.