இராமநாதபுரம்,ஜன.6- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக் கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் பெ.சேகர் தலைமை வகித்தார். நிர்வா கிகள் சோ.முருகேசன், இரா.சிவபாலன். எம்.கே.குமார் ஆகியோர் பேசினர். 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.