நாகர்கோவில், பிப்.8- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாபெரும் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் அவர்களின் நினைவாலயம் புதிய வரலாற்றுப் பக்கமாய் பிப்ர வரி 8 சனிக்கிழமை அன்று திறக் கப்பட்டது. இதன்மூலம் நாகர் கோவிலின் ராணித்தோட்டம் தொழிலாளர்களின் உணர்வெ ழுச்சியால் அதிர்ந்தது. காலை 9.30 மணிக்கு தொழி லாளர்களின் கரகோஷங்களுக்கி டையே சங்கப் பொதுச்செயலா ளர் சி.சுரேஷ்குமார் தலைமை யில் விழா துவங்கியது. கட்டிடக் குழுத் தலைவர் டி.சங்கரநாரா யண பிள்ளை அனைவரையும் உணர்ச்சிப் பெருக்கோடு வர வேற்றார். செயல் தலைவர் எம். லெட்சுமணன் கொடியேற்றி வைத்தார். சம்மேளனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ. சவுந்தரராசன் நினைவாலயத்தை திறந்து வைத்து பேசும் போது, “தொழிலாளர் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒவ் வொரு வெற்றியும் இரத்தமும் கண்ணீருமாய் பெறப்பட்டவை. நமது தோழர் ஹேமச்சந்திரன் அவர்கள் இயற்கையான மனி தர். அவரது சிரிப்பும், பார்வை யும் போலியற்றவை. கட்சி, சங்க வேறுபாடின்றி அனைவரிடமும் அன்பாய் பழகியவர். குமரி மாவட்டத்தில் அவருடன் நடந்து செல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அடியிலும் மக்கள் அன்போடு அவரை வணங்கி உரையாடிச் செல்வார்கள்” என்று உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் கணினி அறை யையும், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரராஜ் நினைவகத்தை யும் திறந்து வைத்தனர். சங்கத் தலைவர் டி.ஸ்டாலின் ராபர்ட் துவக்க உரையாற்றினார். சிபிஎம் குமரி மாவட்டச் செயலா ளர் ஆர்.செல்லசுவாமி கல்வெட்டு களை திறந்து வைத்து உரை யாற்றினார். முன்னாள் எம்.பி., ஏ.வி.பெல்லார்மின் சங்க அலு வலகத்தையும், முன்னாள் எம்எல்ஏவும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான எஸ்.நூர்முகமது தோழர் வி.பி.சிந்தன் அரங்கத்தையும் திறந்து வைத்தனர். சம்மேளனப் பொதுச்செய லாளர் கே.ஆறுமுகநயினார் தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் படத்தை திறந்து வைத்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ் திறப்பு விழா மலரை வெளியிட, மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.லீமாறோஸ் மலரைப் பெற்றுக்கொண்டார். தொழிலாளர் இயக்கத்தின் மாவீரர்களான தோழர்கள் ஜே. ஹேமச்சந்திரன், ஏ.பாலகிருஷ் ணன், எம்.குட்டப்பன், வி.சுரேஷ் குமார் ஆகியோரின் நினைவு ஜோதிகள் தொழிலாளர்களின் கண்களில் உணர்ச்சி பெருக வலம் வந்தன. சங்கப் பொரு ளாளர் பி.தோமஸ் நெகிழ்ச்சி யுடன் நன்றி கூற, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சிறப்பான ஏற்பாடுகளுடன் விழா நிறை வுற்றது.