tamilnadu

img

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்!

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடி

உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது,  வரலாற்றின் பக்கங்களில் பொன்னெ ழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய ‘Red Letter Day’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.  ஸ்டாலின், எழுதியிருக்கும் கடிதத்தில் கூறி யிருப்பதாவது: வெளிச்சம் பாய்ச்சுகிறது “சட்டப் போராட்டத்தின் வழியே  திமுக வும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டு மொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பது தான் வரலாறு. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்தி டும் மகத்தான தீர்ப்பினை, இந்த அரசு முன்னெடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்க ளில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப் படக்கூடிய Red Letter Day ஆகும். அண்ணாவின் குரல்... இந்திய நாடாளுமன்றம் என்பது  அனைத்து மாநிலங்களின் தொகுப்பு ணர்வு என்பதை 1962-ஆம் ஆண்டு மாநி லங்களவையில் தன்னுடைய முதல் பேச்சி லேயே உணர வைத்தவர் அண்ணா. அவரு டைய குரலுக்குப் பிறகுதான், மாநில உரிமை கள் சார்ந்த குரல்களின் எண்ணிக்கை உயர்ந்தது.  கலைஞரின் தீர்மானம்... இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறை களின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்  களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும்  அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்  காட்டும் வகையில் 1974-ஆம் ஆண்டு மாநில  சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றினார் கலைஞர் கரு ணாநிதி. முதன்மையாக நிற்பேன்! அண்ணாவும், கலைஞரும் கட்டிக் காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, திமுக-வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதல மைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்க ளில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன். நியாயத்தை எடுத்துரைத்தோம்! நியாயமும் வலிமையும் கொண்ட குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  திமுக  மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர் களின் குரல் ஓங்கி ஒலித்தது. தோழமைக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நியா யத்தை எடுத்துரைத்தது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக எனத் தமிழ்நாட்டின் 39 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்க ளவையில் உள்ள திமுக எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையும் தம் வயப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக் கைக் குரலாக ஒலித்தனர். 25 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற ஜனநாயக அனுப வம் பெற்ற ஆ. ராசா மக்களவையின் மாற்று அவைத் தலைவராக அமர்ந்து அவையை நடத்திய திறனும், அது போல மாநிலங்களவையை, திமுகவின் இளைய எம்.பி.யான எம். எம். அப்துல்லா நடத்திய பாங்கும், ‘நாற்பதுக்கு நாற்பது’ வெற்றிதந்த தமிழ்நாடு - புதுச்சேரி வாக்கா ளர்களின் தேர்வு மிகச் சரியானதாக அமைந்திருப்பதைக் காட்டியது. தெளிவான தீர்ப்பு!  தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு பாராட்டு! எந்தச் சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு’ என்று இந்த மாநி லத்திற்குப் பெயர் சூட்டி, மாநில உரிமைகளின் குரலை அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றினாரோ அந்த ‘சட்டமன்றம் தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன். ‘மாநிலத்தில் சுயாட்சி - ஒன்றியத்தில் கூட்டாட்சி’ என்று நம் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து, நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக திமுக தன் போராட்டத்தைத் தொடரும்.”  இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிதியுதவி வெட்டு  மருந்து பற்றாக்குறையால் மரணம்

 அமெரிக்க நிதி யுதவி இல்லாத தால் மருந்துகள் இல்லாமல் பல சுகாதார மைய ங்கள் மூடப்படும் நிலை உருவாகி யுள்ளது. தெற்கு சூடானில் காலரா வால் பாதிக்கப்பட்ட  ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மூன்று மணிநேரம் நடந்து வந்தும் மருந்து இல்லாததால் பலியாகியுள்ளனர். ஒருபுறம் அமெரிக்க ராணுவத்தாலும் ஆட்சிகவிழ்ப்பாலும் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாகியுள்ள ஆப்பிரிக்க மக்கள் தற்போது நிதி உதவி நிறுத்தப்பட்டதாலும் மரணமடைந்து வருகின்றனர்.