tamilnadu

img

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல!

சென்னை, அக்.19-  “சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத் துடன் நடந்து கொள்வது நல்ல தல்ல!” என்று சென்னை உயர்  நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  சிதம்பரம் நடராஜர் கோவி லில் கனகசபை மீதேறி பொது மக்கள் பல்லாண்டு காலமாக வழிபட்டு வந்தனர். ஆனால், கோயிலை தங்களின் ஏகபோகத்  தில் வைத்திருக்கும் தீட்சிதர்கள்  கனசபை மீது ஏறி பக்தர்கள் வழி படுவதற்கு அனுமதி மறுத்து வந்தனர்.  இதனிடையே, தீட்சிதர்களி லேயே ஒருவரான நடராஜன் என்  பவர், பட்டியல் சமூக பெண் ஒரு வரை கனகசபையில் வழிபட அனுமதித்த நிலையில், அதற்கு  கோவிலிலுள்ள பிற தீட்சிதர் கள் கடுமையாக எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும், நடராஜன் தீட்சிதர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கோயில் பணியில் இருந்து நீக் கம் செய்தனர்.  இதுகுறித்து தீட்சிதர் நட ராஜன், இந்து சமய அறநிலை யத் துறை ஆணையத்திடம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற,  கடலூர் இணை ஆணையர், நட ராஜன் மீதான பணியிடை நீக்க  உத்தரவை ரத்து செய்தார்.  இதை எதிர்த்து, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் முறையீடு செய்தனர். இந்த  வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு சனிக்கிழமையன்று (அக்.19) விசாரணைக்கு வந்தது

அப்போது பாதிக்கப்பட்ட தீட்சிதர் நடராஜன் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர், “உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு நட ராஜர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது” என பொது தீட்சி தர்கள் நினைப்பதாகவும், அதை  நீதிமன்றம் தான் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும்” என் றும் கேட்டுக்கொண்டார். இதனைக் கேட்ட நீதிபதி, ‘மனக் கஷ்டங்களைப் போக்க கோயிலுக்கு வரும் மக்கள் அவ மானப்படுத்தப்படுவது வேதனை யானது’ என தெரிவித்தார்.  அத்துடன் “தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்  வது நல்ல அறிகுறி அல்ல!”  என்றும், “பக்தர்கள் இல்லாவிட்  டால் கோவில் இல்லை. பக்தர்  கள் வரும் வரைதான் கோயில்,  பக்தர்கள் இல்லாவிட்டால் கோவில் பாழாகி விடும். கோவி லுக்கு வருபவர்கள் அனைவ ரும் சண்டைக்குத் தான் வரு கிறார்கள் என்பது போல தீட்சி தர்கள் நடத்துகிறார்கள்; சிதம்ப ரம் நடராஜர் கோயில் தங்க ளுக்கே சொந்தமானது என்று தீட்சிதர்கள் கருகிறார்கள்; இன்னும் சொன்னால், அவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலா னவர்களாகவும் கருதுகிறார் கள்” என்று காட்டமாக குறிப்  பிட்ட நீதிபதி, “காசு கொடுத்தால்  தான் பூ கிடைக்கும், இல்லா விட்டால் விபூதி கூட கிடைக் காது” என்றார். மேலும், “சிதம்பரம் கோயி லில் மட்டுமே நடத்தப்பட்ட ஆருத்ரா தற்போது பல்வேறு கோயில்களிலும் நடக்கிறது. அதுமட்டுமல்ல, முன்பைப் போல், ஆருத்ரா தரிசனம் காண  சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்  கள் அதிக அளவில் வருவ தில்லை” என்றும் நீதிபதி தண்ட பாணி கூறினார். இறுதியாக, பொது தீட்சிதர் கள் மனு மீது பதிலளிக்க இந்து  சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

பொது நிர்வாகத்தில்  கும்பலாட்சி நீடிக்கக் கூடாது

கோயிலை அரசே ஏற்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சிதம்பரம் நட ராஜர் கோவில் தீட்சிதர் களின் ஆணவம் குறித்தான, சென்னை உயர்  நீதிமன்ற நீதிபதி யின் வேதனை மிகுந்த கருத்தை,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக கே. பால கிருஷ்ணன், தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வா கத்தை, தீட்சிதர்களின் தனிச் சொத்து  போல கருதிக்கொண்டு ஆணவத்து டன் செயல்படுவதை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கள் நியாயமானவை, வர வேற்புக்குரியவை. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.தண்டபாணி, தீட்சி தர்களின் விமர்சனத்திற்குரிய நட வடிக்கைகளை பட்டியலிட்டு வேதனை  தெரிவித்துள்ளார். நடராஜர் கோயிலில்  தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறிய  நீதிபதி, மனக் கஷ்  டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்  தர்கள் அங்கும் அவமானப்படுத் தப்படுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும், நடராஜர் கோயிலே தீட்சி தர்களின் சொத்து என நினைத்துக் கொண்டு, அவர்கள் தங்களை கடவு ளுக்கு மேலானவர்கள் என கருது வதாக சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதி, தீட்சிதர்களின் இந்த போக்கை விமர்சித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில்  நிர்வாகத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாத நிலைமையை சி.பி.ஐ(எம்) உள்பட பல்வேறு இயக் கங்களும் சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் நிலையில், தீட்சிதர்களின் போக்கினால் பக்தர்களின் வருகை  குறைந்து கோயில் பாழாகும்‌ என்ற  எச்சரிக்கையை நீதிபதியும் வேதனை யுடன் பகிர்ந்து கொண்டிருப்பது முக்கிய மாகிறது. வாரணாசி காசி விசுவநாதர் கோயில், தனிச்சட்டம் மூலம் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. அதே முறையில் தனிச் சட்டம் மூலம் சிதம்  பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகமும் முறைப்படுத்தப்பட வேண்டும், கும்ப லாட்சி போக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.