tamilnadu

img

முயல்களும் கிரீடமும் - க.சரவணன்

அது ஒரு காடு. அந்தக் காட்டில் பிங்கி மிங்கி என்ற 
இரண்டு முயல்கள் வாழ்ந்து வந்தன. இரண்டும் 
நண்பர்கள். எங்குச் சென்றாலும் ஒன்றாகவே சென்றன. ஒரு நாள் பிங்கி காரட் சாப்பிட ஆசைப்பட்டது. 
காட்டிற்கு வெளியே உள்ள மலையில் விளைவதாக மிங்கிச் 
சொன்னது. இரண்டும் காரட் விளையும் மலையை நோக்கிச் சென்றன. 
அவை செல்லும் வழியில் சிங்கம் சுற்றித் திரியும் புல்வெளியைக் கடக்க நேரிட்டது. அங்கு ஒரு புதருக்கு 
அருகில் சிங்கத்தின் கிரீடம் கிடப்பதைப் பிங்கிப் பார்த்தது. 
இரண்டு முயல்களும் அதை ஆச்சரியத்துடன் பார்த்தன. 
வேட்டைக்குச் செல்லும்போது சிங்கஅரசி கிரீடத்தைத் 
தவறவிட்டு இருக்கலாம் என்று மிங்கிச் சொன்னது.
இருவரும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். 
“நாம் காத்திருந்து, வேட்டைக்குச் சென்ற சிங்கராணி திரும்பி வரும்பொழுது இதைக் கொடுப்போம்” என்றது மிங்கி. 
“எனக்குப் பசிக்கிறது. முதலில் காரட் சாப்பிட்டு வரு
வோம். அதன்பின் இதை ஒப்படைத்துக் கொள்வோம். அதுவரை புதரிலேயே இருக்கட்டும்.” என்றது பிங்கி. 
“வேறு யாராவது இதைத் திருடிச் சென்று விட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டது மிங்கி. 
“சிங்கராஜா எல்லை இது. அவர் எல்லையைப் பாது
காக்கும்போது யார் திருடிச் சென்றுவிட முடியும்?” என்றது 
பிங்கி. 
“அதுவும் சரிதான். எதற்கும் கிரீடத்தைக் கையில் எடுத்துக் கொள்வோம்.” 
“சரி! சரி! காரட் சாப்பிட்டு வந்து சிங்கராணியிடம் இதை 
ஒப்படைப்போம்.” என்றது பிங்கி. 
“சரி, நீ சொல்வது போல் மலைக்குப் போவோம். அதன் 
பின் ராஜாவோ ராணியோ...” என மிங்கி முயல் முடிப்ப
தற்குள் அருகிலுள்ள புதிரிலிருந்து நரி ஒன்று வெளி
வந்தது. கிரீடத்தைக் கையில் வைத்து நிற்கும் முயல்களைப்
பார்த்தது. 
“சிங்க ராணியின் கீரிடத்தைத் திருடி ஒளித்து வைக் கின்றீர்களா? இதோ! சிங்கராணியிடம் கூறுகிறேன்.” என்று 
மிரட்டியது நரி. 
“நரி அண்ணா ! நீங்கள் தவறாகப் புரிந்து இருக்கிறீர்கள். 
நாங்களும் உங்களைபோல் இப்போதுதான் கிரீடத்தைப் பார்க்கிறோம்.” என்றது பிங்கி. 
“இல்லை. இல்லை... நீங்கள் இந்தக் கிரீடத்தைக் காட்டிற்கு அருகில் உள்ள மலைக்குச் சென்று ஒளித்து வைப்பதற்குத் திட்டமிட்டதைக் கேட்டேன்.” என்றது. 
“இல்லை. நாங்கள் மலையில் விளையும் காரட்டைத் தின்பது குறித்துப் பேசினோம்.” என்றது பிங்கி. 
“கையும் களவுமாகப் பிடிபட்டவுடன் தப்பிக்க நினைக்கி
றீர்களா?” என்று கேட்டது நரி. 
யானை ஒன்று தன் கூட்டத்துடன் அங்கு வந்தது . முயல்களை நரி மிரட்டுவதைப் யானைப் பார்த்தது. அது 
அருகில் வந்து விசாரித்தது. 
“காரட் தின்பதற்குச் செல்வதாகக் கூறுகிறீர்கள். இந்தப் புதரில் உங்களுக்கு என்ன வேலை? அதுவும் 
இந்தக் கிரீடத்தை வைத்து என்ன செய்து கொண்டிருக்கி
றீர்கள்!” என யானை கேள்வி எழுப்பியது. 
“ராணி தவற விட்ட இந்தக் கிரீடத்தைத் திருப்பிக் கொடுக்கவே நாங்கள் நினைத்தோம்.” என இரு முயல்களும் திரும்பத் திரும்பக் கூறின.
குரங்கு ஒன்று அருகிலுள்ள மரத்தில் இருந்து குதித்தது.
“யானை மாமா! பாவம், முயல்கள். நரிதான் கீரிடத்தை 
ஒளித்து வைத்தது. முயல்கள் வருவதைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டது. இந்த மரத்தின் உச்சியில் இருந்து பார்த்தேன். இந்தக் கீரிடத்தை என்னிடம் கொடுங்கள். சிங்க ராணி வரும்போது கொடுத்துவிடுகிறேன். “ என்றது குரங்கு. 
அப்போது, சிங்கத்தின் கர்ஜனை மிக அருகில் கேட்டது. 
குரங்கு தப்பி ஓடியது. 
“சிங்கராணி! கிரீடத்தை முயல்கள் திருடி வச்சி
ருக்காங்க. பிடிச்சு வச்சிருக்கேன். வாங்க! வேகமா வாங்க.” 
என நரி கத்தியது. 
யானை அமைதியாக நின்றது. சிங்கம் மானை வேட்டை
யாடி இழுத்து வந்தது. யானை நடந்தவற்றைச் சிங்கத்தி
டம் கூறியது. 
“முயல்கள் சொல்வதுதான் உண்மை. மானை வேட்டையாடித் துரத்திச் சென்றபோது கிரீடம் கழன்று விழுந்துவிட்டது. அடுத்தவர்கள் பொருள்கள் மீது ஆசை கொள்ளாமல் திரும்பக் கொடுக்க வேண்டும் என நினைத்ததற்குப் பாராட்டுகள். இனி காரட் தேடி மலைக்குச் செல்ல வேண்டாம். மலையில் இருந்து குதிரை
கள் வாரம் வாரம் காரட்டுகளைக் கொண்டு வந்து தரும்” 
என்றது சிங்கராணி. 
யானை நரியின் வாலை துதிக்கையால் பிடித்தது. “ பொய் சொன்னது மட்டுமல்லாமல், அடுத்தவர் பொருளை 
அபகரிக்க நினைத்த நீ , இனி இக்காட்டில் வாழ்வதற்குத் தகுதியற்றவன்.” எனக் கூறி யானை நரியைத் தலைக்கு மேலே தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி வீசியது.
முயல்கள் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே சென்றன.