அமைதி, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி கூடாது!
பொது அமைதி, மத நல்லி ணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய இந்து முன்னணியின் மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது, மதக் கலவரம் மூலம் மக்களைப் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் பெறு வதற்கான திட்டத்தை ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கையில் எடுத்துள்ளன. இதில், திருப்பரங்குன்றத்தை மையப் படுத்தி கடந்த 2 மாதமாக பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதனொரு பகுதியாகவே, ‘திருப்பரங்குன்றம் மலையைக் காப்ப தற்காக’ பிப்ரவரி 18 அன்று சென்னை யில் ‘வேல் யாத்திரை’ நடத்த உள்ள தாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாரத் இந்து முன்னணியின் வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசார ணைக்கு வந்த நிலையில், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறி ஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “ஏற்கெனவே திருப்பரங்குன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்ஹா, கொடி மரம், மலை வழிப்பாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதுகுறித்த பிரச்ச னையை எழுப்புவது சரியல்ல. மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து, முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். எனவே, போராட்டத் துக்கு அனுமதி தர முடியாது” என்று தெரிவித்தார். இதையடுத்து,
“திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு? திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, சென்னையில் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? தேவையில்லாமல் பிரச்சனை யை உருவாக்கப் பார்க்கிறீர்கள்” என இந்து முன்னணிக்கு கண்டனம் தெரி வித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யிருக்கிற கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த போராட்டக் காரர்கள், நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும்