சுயமரியாதை, சமூகநீதிக்கான போராட்டம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்டம் என்பது சுயமரி யாதை, சமூக நீதிக்கான போராட்டம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வியாழனன்று (மார்ச் 30) வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து அவர் பேசியது வருமாறு:- வரலாற்றிலே இன்று ஒரு முக்கியமான நாள். 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாள மாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகல வன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றுவோம். திமுக முதன்முறையாக, 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார் பேரறிஞர் அண்ணா. உடனடியாக பேரறிஞர் அண்ணா, கலை ஞர் முதலானோர், திருச்சி சென்று பெரி யாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.
“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலை நிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல. அவற்றில் மிக முக்கிய மான போராட்டம்தான் வைக்கம் போராட்டம். 1924-25 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடி யாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற் படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.
1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் என்பவரால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம். அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதி யைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலை வர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலை வர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவராக இருந்த தந்தை பெரியார், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
இரண்டுமுறை பெரியார் கைது
வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங் காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனை வரும் அரசியல் கைதிகள் போல நடத்தப் பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் கைகளி லும் கால்களிலும், விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார். சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார். வைக்கம் போராட்டத்தில் ஈடு பட்டு 74 நாட்கள் சிறையில் இருந் தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டி னார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.
100 ஆண்டுகள் ஆகியும்
போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்கும் இடையே பேச்சு நடத்திய காந்தியடிகள், தந்தை பெரியாரையே அப்போது உடன் அழைத்துச் சென்றார். கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள். 1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத் கர், தனக்கு ஊக்கமளித்த போராட் டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார். இத்தகைய வர லாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூக நீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டி ருக்கிறது. எளிய மக்களுக்காக எல்லை களைக் கடந்து போராடி, வர லாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்து களைத் தொடர்ந்து வலியுறுத்த வும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஒரு சீர்திருத்த இயக்கம், அரசி யல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திரா விட இயக்கத்துக்குக் கிடைத்தி ருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை. அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போது, வைக்கம் நூற் றாண்டு விழா வருவது பொருத்த மான ஒன்று. சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது. அத்தகைய சமூக சீர் திருத்த நோக்கம் கொண்டவர் களாக இன்றைய இளைய சமு தாயம் திகழ, இதுபோன்ற கடந்த கால வரலாறுகளை நாம் நினை வூட்டிக் கொண்டே இருக்க வேண் டும். இவ்வாறு முதலமைச்சர் பேசி னார்.
நாடு கடந்தவர் பெரியார்
பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்த மானவர் அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள். நேற்றைய கிளர்ச்சிக்கும், இன்றைய முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் கருத்தியல்கள். அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் நமது அரசு தொடர்ந்து செயல்படும்.
கோட்டயம், மார்ச் 30- தீண்டாமைக்கு எதிராகவும் சம உரிமைக்காகவும் நாடு தழுவிய போராட்டத்துக்கு வழிவகுத்த வைக் கம் சத்தியாகிரகத்தின் 99-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று தொடங்கியது. கேரள மாநிலத்தின் மறுமலர்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு களில் ஒன்று வைக்கம் சத்தியாகிர கம். மன்னர் ஆட்சியால் திணிக்கப் பட்ட மேல்தட்டு குண்டர்கள் மட்டுமல் லாது காவல்துறை, சிறைச்சாலை களின் நடைபெற்ற கொடூரமான தாக்குதலுக்கு அடிபணியாத வர லாற்று சிறப்பு மிக்க போராட்டங்க ளில் ஒன்று வைக்கம் சத்தியாக்கிர கம்.
நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த வைக்கம் போராட்டம் 1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கியது. 603 நாட்கள் நீடித்த வைக்கம் போராட்டத்தின் நோக்கம் “கோவி லுக்கு அருகில் உள்ள பொதுச் சாலை யில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மாக நடக்க உரிமை வேண்டும்” என் பது தான். இந்தப் போராட்டம் சுதந்தி ரம், சம உரிமை, நவீன இந்தியா வுக்கான போராட்டங்கள் தொடங்கு வதற்கு உந்துசக்தியாகவும் விளங்கி யது. நாராயண குருவின் ஆதரவோ டும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முற்போக்காளர்களின் பங் கேற்போடும் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், டி.கே.மாதவன், கே.பி. கேசவமேனன் ஆகியோர் போராட் டத்தை வழிநடத்தினர். போராட்டத்தின் 100-ஆவது தொடக்க விழாவையொட்டி கேர ளம் மாநிலம் முழுவதும் 603 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த கேரள அரசும், தமிழ்நாடு அரசும் திட்டமிட்டுள்ளன. நூற்றாண்டு விழா கொண்டாட்டங் களை ஏப்ரல் 1 அன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
எஸ்என்டிபி யூனியன், கேரள காங்கிரஸ் கமிட்டி, சத்தியாகிரக நூற்றாண்டு விழா கமிட்டி என பல்வேறு அமைப்புகள் சத்தியாக்கிரக நூற்றாண்டைக் கொண்டாடவுள்ளன. கேரள மாநில காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே வியாழனன்று கலந்து கொண்டார். எஸ்.என்.டி.பி. எனப்படும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் தலைமையில், ஏப்ரல் 1 முதல் மூன்று நாட்கள் நடைபயணம் நடைபெறுகிறது. சனாதனத்தை ஆதரிக்கும் பாஜகவும் வைக்கம் நூற்றாண்டை கொண்டாடுவதுதான் இதில் வேடிக்கை.