tamilnadu

img

மேற்கு ஆசியா முழுவதையும் யுத்த வளையத்திற்குள் தள்ளும் இஸ்ரேல்

இஸ்ரேல், காசா மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கி அக்டோபர் 7-உடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஹமாஸின் தாக்குதலை சாக்காகக் கூறிக்கொண்டு, பாலஸ்தீனம், காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை இஸ்ரேல் தொடங்கியது. ஹமாசை ஒழித்துக் கட்டுவதே தங்கள் நோக்கம் என்று கூறிக்கொண்டு காசாவில் தாக்குதலைப் பிரகடனம் செய்தது. ஆனால் அது தன் நோக்கத்தை அடைவதற்குப் பதிலாக, இஸ்ரேல் இன்று லெபனான், ஈரான், சிரியா, ஏமன் மற்றும் இராக் முதலிய  மேற்கு ஆசிய  நாடுகள் முழுவதும் தன்னுடைய தாக்குதல் கள் மூலம் தீக்கிரையாக்கிக் கொண்டி ருக்கிறது. இதனுடைய ரவுடித்தனமான நட வடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் அமெரிக்கா பக்கபலமாக நின்றுகொண்டிருக்கிறது.

அயோக்கியத் தனமான அரசு

கடந்த பதினைந்து நாட்களில் லெபனான் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்கு தல்கள் போரின் தன்மையை முற்றிலும் மாற்றிவிட்டன. நன்கு திட்டமிட்ட முறையில், இஸ்ரேல் தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கி இருக்கிறது. பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா தலைவர்களை இலக்கு வைத்து படுகொலைகள் செய்துகொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்தி லிருந்த ஹசன் நஸ்ரல்லா, பதுங்கு குண்டைப் பயன்படுத்தி படுகொலை செய்யப் பட்டிருப்பதன் மூலம் போர் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. அக்டோபர் 1 அன்று, தெற்கு லெபனானில் ஒரு ‘வரையறுக்கப்பட்ட, உள்ளூர் மயமாக்கப்பட்ட மற்றும் இலக்கு’ தரைவழி நடவடிக்கையைத் தொடங்குவதாகத்தான் இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், உண்மை யில், அது லெபனானின் எல்லைகளில் முழு அளவில் தாக்குதலைத் தொடங்கக்கூடிய விதத்தில் துருப்புகளைக் கொண்டுவந்து குவித்திருக்கிறது. இஸ்ரேல், மேற்கு ஆசியாவிலேயே ஓர் அயோக்கியத்தனமான அரசாகும். சர்வ தேசச் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறி, பல்வேறு நாடுகளில் கொலைபாதகச் செயல்களிலும், தாக்கு தல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் அது, ஈரான் நாட்டிற்குள் நுழைந்து ஈரானிய கமாண்டர்களைக் குறி வைத்துத் தாக்கி, படுகொலைகள்  செய்திருக்கிறது.

இருமுறை இஸ்ரேலை தோல்வியடையச் செய்தவர்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய ஜனாதிபதி, பதவியேற்பு விழாவின்போது இஸ் மாயில் ஹனியே, (இவர் ஹமாஸ் அமைப்பின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராவார்) படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொட ர்ந்து பெய்ரூட்டில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டு, நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். நஸ்ரல்லாவைப் படுகொலை செய்த பின்னர், ஹிஸ்புல்லாவில் அனைத்தையும் முடித்துவிட்டோம் என்று இஸ்ரேல் அறி வித்தது. இத்தகைய இஸ்ரேலின் அறிவிப்பு களுக்கும் எதார்த்த நிலைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. 1992இல் இஸ்ரேல், ஹிஸ்புல்லாவின் இணை நிறுவனரும், இரண்டாவது பொதுச் செயலாளருமாக இருந்த அப்பாஸ் அல் மூசாவியைப் படு கொலை செய்தது. அவருக்குப் பதிலாக நஸ்ரல்லா நியமிக்கப்பட்டார். அவர், இரண்டு முறை இஸ்ரேல் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினார். 2006இல் ஹிஸ்புல்லா விடம் படுமோசமான முறையில் தோல்வி யடைந்தபின், தான் தோல்வியடைந்து விட்டதை இஸ்ரேல் ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. எனினும் இவற்றிலிருந்தெல்லாம் இஸ்ரேல் எவ்வித மான படிப்பினையையும் பெற்றதாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் மொழியில் பேசும் இஸ்ரேல்

மேற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புறக்காவல்நிலையம் போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரேல், அமெரிக்க மொழியிலேயே பேசிக்கொண்டிருக்கிறது. ’போரை முடிவுக்குக் கொண்டுவர போரிட வேண்டும்’ என்பதே தங்களுடைய ராணுவப் போர்த்தந்திரம் என்று  அது பிரகடனம் செய்துள்ளது. (It has declared its military strategy as ‘escalate to de-escalate’.) இது ஒரு தவறான புரிதல் ஆகும். படுதோல்வி அடைந்த போர்த்தந்திரமுமாகும். இத்தகைய மூர்க்கத்தனமான தாக்கு தல்கள் மூலம் எதிரியைச் சரணடையச் செய்து விடலாம் என இஸ்ரேல் கருதுகிறது. இத்த கைய மூர்க்கத்தனமான தாக்குதல்கள் எல்லாம் வெற்றியைத் தந்துவிடாது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்று களைக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானம், இராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவுக்கு கிடைத்த தோல்விகளை யெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இதே நிலை இஸ்ரேலுக்கும் ஏற்படும்.

ஈரானின் 2ஆவது பதிலடி

ஹிஸ்புல்லாவும், ஹமாசும் முடங்கிவிட்ட தாகவும், அதனால் ஈரான் பலவீனமடைந்து விட்டதாகவும் இஸ்ரேலியத் தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே, ராணுவத் தாக்கு தலுக்கு அழைப்பு விடுத்து அதன் அணு சக்தி நிலையங்களையும்கூட குறிவைத்திருக்  கின்றனர். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமல்படுத்துவது’ குறித்தும், ‘மேற்கு ஆசியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றி யமைப்பது’ குறித்தும் பேசிக் கொண்டிருக் கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சிந்தனைகளுடன் இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் தன் மேலாதிக்கத்தை நிறுவிட பொறுப்பற்ற முறையில் முரட்டுத்தனமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இது, அமெரிக்காவின் நலன்களுக்கும் சேவை செய்கிறது.   இஸ்ரேலைத் தடுத்து நிறுத்தவும் அதன் நலன்களைப் பாதுகாக்கவும், ஈரான் இப்போது 180க்கும் மேற்பட்ட ஏவுகணை களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு ஈரான் பதிலடி கொடுக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

அமெரிக்காவின் அளவில்லா ராணுவ உதவி

இஸ்ரேல் இவ்வாறு ரவுடித்தனமான முறையில் நடந்துகொள்வதற்கு, அது அமெரிக்காவிடமிருந்தும், இங்கிலாந்து போன்ற அதன் கூட்டாளி நாடுகளிடமிருந்தும் பெறும் அளவற்ற ஆதரவே காரணமாகும். இஸ்ரேல் இப்போது மேற்கொண்டிருக்கும் ஒவ்வொரு அடாவடித்தனமான நடவடிக்கைக்குப் பின்னாலும் அமெரிக்கா இருந்துவருவதைக் காண்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மற்ற  எந்த நாட்டையும்விட இஸ்ரேலுக்கு அமெரிக்கா சுமார் 124 பில்லியன் டாலர் களுக்கும் அதிகமான அளவில் ராணுவ உதவிகளை அளித்துள்ளது. 2016 முதல் இஸ்ரேல் 10 ஆண்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாகப் பெற்றுக்  கொண்டிருக்கிறது. காசாவிற்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய நாளில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அதிகமான இராணுவ உதவி களை உறுதியளித்தார். இதில் வெடி மருந்துகள் மற்றும் இரும்புக் குவிமாடத்தை (Iron Dome) நிரப்புவதற்கு இடைமறிக்கும் கருவிகள் அடங்கும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்கா தயாரித்த ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 3.5 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் இஸ்ரேலின் ராணுவ ஆயுதக் களஞ்சியத்தை நிரப்ப கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கா தன்னுடைய விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளையும் இஸ்ரேலுக்கு அளித்துள்ளது. ஈரானிய ஏவுகணைகளை முறியடிப்பதற்காகத்தான் இவ்வாறு இஸ்ரேலுடன் ‘நுணுக்கமாகத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக‘ அமெரிக்கா அறிவித்துள்ளது. இங்கிலாந்தும்  இதே போன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தள வாடங்களையும், பண உதவிகளையும் அளித்துக்கொண்டே, தான் போர் நிறுத்தத் திற்காகவும், போர் விரிவுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் தான் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறுவதெல் லாம் வெறும் வாய்ச்சவடால்களேயாகும்.

அமெ., இஸ்ரேலின் இளைய பங்காளியான இந்தியா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இளைய பங்காளியாக மாறியுள்ள இந்திய   அரசாங்கம், பாலஸ்தீனத்திற்கு அளித்து வந்த ஆதரவுக் கொள்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளது. இஸ்ரேல், தான் ஆக்கிர மித்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதில் பங்கேற்று படுகொலைகளைக் கண்டித்து, தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்குப் பதிலாக, எதுவும் கூறாமல் ஒதுங்கிக்கொண்டுவிட்டது.   பிரதமர், நேதன்யாகுவுடன் தொலைபேசி யில் பேசியபோது பயங்கரவாதத்தை கண்டிக்க நேரம் கிடைத்தது. ஆனால் காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் தைரியத்தை அவர்களால் திரட்ட முடியவில்லை. இத்தகைய தாக்குதல்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, இஸ்ரேலின் பேஜர் குண்டுகளை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று இந்திய ராணுவத் தலைவர் பாராட்டினார். மிகவும் வெட்கமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து பாகங்கள் மற்றும் டிரோன்களை பாலஸ்தீனர்களுக்கு எதிராகப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதித் துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தமது  வெளியுறவுக் கொள்கையை - ஆக்கிர மிக்கப்பட்ட நாடுகளின் உரிமைகளுக்கு ஆதரவாக நிற்பதை விட்டுவிட்டு ஆக்கிரமிப்புப் படைகளுடன் நிற்கும் அளவிற்கு எவ்வளவு தூரம் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை இவையெல்லாம் காட்டுகின்றன.

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்துக!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு உலக அமைதியை அச்சுறுத்தும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் போர் விஸ்தரிப்பு பேரழிவினை ஏற்படுத்திடும். உலகெங்கிலும் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக, உடனடியாக போர்நிறுத்தம் கோரி  அணி திரண்டு வருகின்றனர். தொழிலாளர் கள் போராயுதங்களை ஏந்திச் செல்லவோ அல்லது அந்தக் கப்பல்களை கப்பல் துறைக்கு அனுமதிக்கவோ மறுத்து வரு கின்றனர். மாணவர்கள் தங்கள் பல்கலைக் கழகங்கள், இஸ்ரேலுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் இருந்து விலக வேண்டும் என்று கோருகின்றனர். நமது நாட்டிலும் இத்த கைய எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப்பெற வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுத விநியோ கத்தை நிறுத்திவிட்டு பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக நிற்க நமது அரசை வற்புறுத்த வேண்டும்.

அக்டோபர் 2, 2024  
- தமிழில்: ச.வீரமணி