tamilnadu

img

மதமாற்ற தடைச்சட்டம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறது

திண்டுக்கல், மார்ச் 26 - மதமாற்ற தடைச்சட்டம் சிறு பான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி அச்சம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சனிக்கிழ மையன்று (மார்ச் 25) சமூக நல்லி ணக்க சிறப்புக் கூட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகா, அரியானாவில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டங்கள் சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக பயன்படுத்து வதற்கு வாய்ப்புண்டு என்று சிறுபான்மை மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. மைக்கேல்பட்டி பிரச்சனை நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்ப தால் உடனடியாக நடவடிக்கை களில் ஈடுபடவில்லை. சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம். சிபிஐ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குற்றம் செய்திரு ந்தால் குற்றம்சாட்டப்பட்டவரை தண்டிக்கட்டும். மதமாற்றம் செய்வதை விரும்பவில்லை. கிறிஸ்துவ பள்ளி, நிறுவனங்களில் உள்ள வர்களை மதமாற்றம் செய்ய வில்லை. இந்து. இஸ்லாமிய மாணவர்களுக்கு நல்லொ ழுக்கத்தை பாடமாக கற்பிக்கி றோம். பள்ளிகளில் மாணவிக ளுக்கு பாலியல் தொல்லை கொடு ப்பது மிகவும் கண்டனத்திற் குரியது. கிறித்துவ பள்ளிகளில் அத்தகைய சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப் போம். பள்ளிகளில் பாலியல் பிரச்சனைகளில் ஈடுபடுவோரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யவோம். பணி நீக்கம் செய்யவும் தயாராக இருக்கி றோம். பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு சமூக நல்லி ணக்கம், மத நல்லிணக்கம், சாதி வேறுபாடுகளை களைதல் போன்ற விழிப்புணர்வுகள் கொடுத்து இளம் உள்ளங்களை உருவாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்சசியில் அருட்தந்தை யர்கள் ஜார்ஜ், சகாயராஜ் , பிலிப் சுதாகர், முகமது அலி, அன்வாரி, டாக்ட்ர் அமலாதேவி, மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேசுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.