மதுரை,டிச.29- மதுரை மத்திய சிறையில் ஆயி ரத்து 300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையின் முதல்தளத்தில் அடைக்கப்பட்டுள்ள பழைய கைதிகளுக்கும், அண்மை யில் திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதிகளுக்கும் இடையே திடீர் வாக்குவாதமும் தொடர்ந்து மோதலும் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. ஒருவரை ஒருவர் கற்களாலும் பாட்டில்களாலும் தாக்கிக் கொண்ட னர். சுற்றுச்சுவர் அருகேயுள்ள மரங்க ளின் மீது ஏறி நின்றவாறு உடலை பிளேடால் கிழித்துக் கொண்டனர். மோதலின் போது சுவருக்கு வெளி யேயும் கற்களை வீசினர். இதனால் சிறையை ஒட்டிச் செல்லும் சாலை யில் கற்கள் வந்து விழுந்தன. இத னால் அந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.