சென்னை,டிச.15- தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, நேரு உள்விளை யாட்டு அரங்கில், ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையி லான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் மாணவர்களுடன் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது,“ தமிழக முதல்வர் தங்க கோப்பைக்கான போட்டி ஜனவரி மாதம் தொடங்கும். பீச் (கடற்கரை) ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்துவதற்கான முயற்சி கள் நடந்து வருகிறது”என்றார். இந்த நிகழ்வில், பங்கேற்ற மாணவர் ஒருவர் “எங்கள் பள்ளி யில் சரியான கிரவுண்ட் இல்லை. நீங்கள் அமைத்து கொடுக்க முடியுமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “கண்டிப்பாக மைதானம் அமைத்து கொடுப்பேன்” என்றார். விளையாட்டு நேரத்தில் வேறு பாடம் எடுக்கிறார்கள் என்று இன்னொரு மாணவி தெரிவித்த புகாருக்கு இதுகுறித்து முதல மைச்சர், அதிகாரிகள் கவனத்துக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் பி.கே. சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.