தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதென இருநாடுகளும் பரஸ்பரம் உடன்பாடு இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் முடிவுக்கு வந்தது
புதுதில்லி, மே 10- இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் அனைத்து வகையான தாக்குதல்களையும் இருநாடுகளும் நிறுத்திக் கொண்டன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப் ரல் 22 அன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்று லாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உல கம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘ஆபரேசன் சிந்தூரை’த் தொடர்ந்து மோதல்!
இதனையடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தரப்பில் ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில், மே 7 அதிகாலை துல்லி யத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பதிலடி என்ற பெயரில், இந்தியா வின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது.
3 நாட்களாக நீடித்த தாக்குதல்
பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூர் விமா னப்படை தளங்களில் உள்ள பள்ளி மற்றும் மருத்துவமனைகள் மீது குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி யது. சனிக்கிழமையன்று அதிகாலை 1.30 மணியளவில் ஸ்ரீநகர் முதல் சாலியா வரை 26 இடங்களை பாகிஸ்தான் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியது. ஆனால், துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவு கணைகள் மூலம் அவை அனைத்தை யும் இந்தியா முறியடித்தது.
பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா
இவ்வாறு தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந் தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் அமெ ரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ தொலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசி வந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாகிஸ் தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரி டம் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினார். பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சனிக்கிழமையன்று இந் திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனும் ரூபியோ பேசி னார்.
முதலாளித்துவ நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் “இந்தியாவும் பாகிஸ்தானும்
உட னடியாக பதற்றத்தைத் தணிக்க வேண்டும். இருநாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று ‘அமெரிக்கா, கனடா, இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்’ ஆகிய முதலாளித்துவ நாடு களைச் சேர்ந்த ‘ஜி-7’ கூட்டமைப்பும் சனிக்கிழமையன்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயா ராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரத மருமான இஷாக் தார் தெரிவித்தார். இதனிடையே, சனிக்கிழமையன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை, தமது இல்லத்திற்கு அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி னார். முப்படைத் தளபதிகள் மற்றும் முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோருடனும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
போர் நிறுத்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்ட டிரம்ப்!
இந்தப் பின்னணியிலேயே, யாரும் எதிர்பாராத வகையில், இந்திய நேரப் படி மாலை 5.33 மணிக்கு, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளி யிட்டார். “அமெரிக்காவின் தலையீட்டாலும் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சு வார்த்தையின் பலனாகவும் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்த சம்மதித்தன. இரு நாடு களும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்தி சாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த விவகாரத்தில் கவ னம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் இந்திய வெளியுற வுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர், “பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ மேஜர் ஜெனரல் காஷிப் அப்துல்லா சனிக்கிழமையன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காயை தொலைபேசியில் அழைத் தார். இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நட வடிக்கைகளையும் இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் உடனடியாக நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்த உடன்பாடை நடைமுறைப்படுத்த இரு தரப்பினருக்கும் உரிய அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன. மே 12 ஆம் தேதி இரவு 12 மணிக்கு இரு நாடுகளின் தளபதிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்றார். இதன்மூலம் ஏப்ரல் 22 முதல் இந் தியா - பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த மோதல் - போர்ப் பதற்றம் முடி வுக்கு வந்துள்ளது.