குலசேகரம், நவ.7- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ரப்பர் தோட்ட தொழி லாளர்கள் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தி காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை நவம் பர் 7 திங்களன்று துவக்கினர். ஒப்பந்த மற்றும் தினக்கூலிகள் உட் பட 2 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து தமி ழக முதல்வர் மற்றும் உயர் அதி காரிகளுக்கு அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் இயங்கும் ரப்பர் கழகத்தில் 2016 இல் காலாவதியான ஒப் பந்தத்தை புதுப்பித்து புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வில்லை. இடைக்கால ஒப்பந்தம் மட்டுமே நடந்துள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்காத நிலையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த 31.12.2021 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் நியாயமாக தீர்வு காண வேண்டிய கோரிக்கைகளை தவிர்த்து ஊதிய உயர்வுக்கு மட்டுமே முடிவு காணப்பட்டது.
இதர முக்கிய பிரச்சனைகளில் தீர்வு கண்டு உடன்பாடு காணலாம் என தெரி வித்தும் நடக்கவில்லை. எட்டு மாதங்கள் கடந்து 16.8.2022 இல் சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்பு 3 அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 31.12.2022 அன்று உடன்பாடு கையெழுத் திட முடிவு செய்யப்பட்டது. தமி ழக அரசு நிதி ஏதும் வழங்கத் தேவையில்லாத நிலையில் இரண்டரை மாதங்கள் கடந்தும் இந்த பேச்சுவார்த்தை அடிப்படை யில் உடன்பாடு காண முன்வர வில்லை. தொழிலாளர் துறை ஆணையரால் நிராகரிக்கப்பட்ட வற்றை தேவையற்ற நிபந்தனை களை ரப்பர் கழக நிர்வாக இயக்கு நர் கூறி வருகிறார். 30.11.2022 அன்று இரண்டா வது ஒப்பந்த காலமும் முடிவ டைய உள்ளது. எனவே, அமைச் சர்கள் முன்பு ஏற்பட்ட உடன் பாட்டு நகலினை 12(3) ஒப்பந்த மாக உடனடியாக செய்திடவும், தொழிலாளர் விரோத செயலில் ஈடுபடும் நிர்வாக இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. இந்த சூழ்நிலையில் முன்ன றிவித்தபடி திங்களன்று கால வரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது. இப்போராட்டத் துக்கு சிஐடியு, தொமுச பேரவை, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி ஆகிய சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.