tamilnadu

img

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகளை அதிகப்படுத்துக! மாணவர் சங்கம் வேண்டுகோள்!

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில்
அறிவியல் பாடப்பிரிவுகளை அதிகப்படுத்துக!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.  கிளை மாநாட்டுக்கு தமிழினியா தலைமை வகித்தார். கிளை தலைவர் பரசுராமன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் துவக்கழவுரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் சந்துரு பேசினார். மாநிலத் தலைவர் சம்சீர் அகமது நிறைவுரையாற்றினார். மாநாட்டில் 25 பேர் கொண்ட உபகுழு தேர்ந்தெடுக்கப்பட்டது. உப குழுவின் தலைவராக சரவணன், செயலாளராக மகேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளை அதிகப்படுத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து முடிவு கட்ட வேண்டும். அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதல் நுழைவு வாயிலை திறந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். மாணவர் ஜனநாயக பேரவை தேர்தலை நடத்தி, கல்லூரி வளாகங்களில் ஐசிசி கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.