சென்னை, மே 28 - முதல்வரின் வீரப்பதக்கம் பெறும் காவலர்களுக்கு, குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கு இணையான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு காவல் துறை சார்பில், 2019, 2020, 2021 ஆம் ஆண்டுக ளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது இதில், 319 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், ஒன்றிய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது உரையாற்றிய முதல மைச்சர், “காவல் துறையை தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் கருதுகின்றனர்.
ஆனால், குற்றங்கள் நடக்காத சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும்”என்றார். ஒரு காவலர் அல்லது ஒருகாவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஒட்டுமொத்த காவல் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. காவலர்களின் செயல்பாடுகள் துறையை தலை நிமிரச் செய்ய வேண்டுமே தவிர, தலை குனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு காவலர்கள் அனைவருக்கும் இருந் தால், குற்றச் சம்பவங்களே நடை பெறாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் முதல்வரின் வீரப் பதக்கங்க ளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்துக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் சலுகைக ளுக்கு இணையாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சி.சைலேந்திர பாபு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், சிறைத் துறைடிஜிபி சுனில்குமார் சிங், தீயணைப்புத் துறை டிஜிபி பிராஜ் கிஷோர், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.