tamilnadu

img

தென்னிந்தியாவின் முதல் துல்லிய பொறியியல் -தொழில்நுட்ப மையம் காஞ்சிபுரத்தில் திறப்பு

சென்னை,நவ.22- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிபவர்கள் சர்வதேச தொழில் சந்தையில் போட்டியிட அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவுக்குள் நுழைய வழி வகை செய்யவும், தமிழகத்தில் 5 இடங்களில் சுமார் 100 கோடி ரூபாயில் மெகா கிளஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவ.22) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெரும் குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை நவம்பர் 22 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பொது வசதிகளை சென்னை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.