தொழிலாளர் நலவாரிய பதிவுடன் ஆதார் எண் இணைக்க அழைப்பு
தூத்துக்குடி,மே 19 -தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிலாளர் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) க. பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணைஇணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலமாக தமிழ்நாடு கட்டுமானம்மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆதார் எண் இணைக்கப்படாத தொழிலாளர்கள் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டடம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101 அலுவலகத்தில் நேரில்அளிக்கலாம். மேலும், 0461-2341110 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொண்டும், டடிளளளவhடிடிவhரமரனi@பஅயடை.உடிஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நஷ்டம் கடன்களால் தொழில் அதிபர் தற்கொலை
நாகர்கோவில், மே 19-கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர், விக்னேஷ்வரா என்ற பெயரில் பிஸ்கட், டிஷ்டிவி போன்றவை மொத்த வியாபாரம் செய்யும் ஏஜென்சிநடத்தி வந்தார். இதில் வந்த லாபத்தை பங்கு சந்தையில்முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், சுப்பிரமணி தொழிலில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததால், வெளியே அதிகளவில் கடன் பெற்றதாக தெரிகிறது. தினமும் காலை தனதுஏஜென்சியைத் திறக்கச்செல்லும் சுப்பிரமணி, சனியன்று செல்லவில்லை. வழக்கம் போல் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் சுப்பிரமணிக்கு போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால், ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, ஊழியர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போதுஅங்கு சுப்பிரமணி, அவரது மனைவி ஹேமா (48), மகள்ஷிவானி (20), சுப்பிரமணியின் தாய் ருக்மணி (72) ஆகியோர்படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த வடசேரி காவல் துறையினர், சடலமாக கிடந்த நான்குபேரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல் கட்ட விசாரணையில் நான்கு பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்த சுப்பிரமணி, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த ஷிவானி குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் மருத்துவம் படித்துவந்தார். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்த ஏஎஸ்பி ஜவஹர்,தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியின் உறவினர்கள்மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கந்து வட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறுமியிடம் வாலிபர் அத்துமீறல்
திருநெல்வேலி, மே 19-நெல்லை அருகே சேர்ந்தமரத்தில் சிறுமிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்த வாலிபரை கைது செய்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள தர்மத்தூரணி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த சுமார் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அந்த சிறுமிதனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாராம். உடனே அவரது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு திருமணம் நிறுத்தம்
நாகர்கோவில், மே 19-குமரி மாவட்டம், வெள்ளமடம் அருகே குமரன்புதூரைச்சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த17 வயது மாணவிக்கும், நெல்லை மாவட்டம்,அம்பலவாணபுரத்தை சேர்ந்த 28 வயதுவாலிபருக்கும் வெள்ளியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஆவரைகுளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை பெற்றோர், உறவினர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், மாணவி மேலும்படிக்க விரும்பியதோடு, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.இதற்கிடையே 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம்நடக்கவுள்ளதாக, சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு)பிரின்சி தலைமையிலான அதிகாரிகள் குழு மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரித்தனர். அப்போது பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியதோடு, சிறுமியை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டசமூக நல அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.விசாரணைக்கு பின்னர், சிறுமியை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிறுமியை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆவரைகுளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமி காலையிலேயே உணவு எதுவும் சாப்பிடவில்லை என்றும்,அழைத்துவந்த அதிகாரிகளும் பிற்பகல் வரை உணவு ஏதும் வழங்கவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்த வேண்டிய குழந்தைகள் நல குழுவினரும் பிற்பகலுக்கு பின்னரே வந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.