உலகை, போரினால் சின்னா பின்னமாக்கிய ஜெர்மனியின் இட்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு செம்படையிடம் நாஜிக்களின் சரணாகதி 1945 மே 9 அன்று நிகழ்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் மே 9 ஆம் நாளன்று மாஸ்கோவில் பாசிஸ்டு களை வென்றதன் நினைவாக வெற்றி பேரணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அது நடைபெற்றது. 1943இல் ஜெர்மன் நாஜிகளின் கட்டுப்பாட் டில் இருந்த போலந்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த படம் இது. “சோபிபோர்” போலந்து ரஷ்ய எல்லையில் அமைந்திருந்த ஊர். இட்லரின் திட்டப்படி யூதர்களைக் கொன்று குவிக்கும் கொலை முகாம் ஒன்று இங்கு நிறுவப்பட்டது. போலந்து மற்றும் பிற நாடுகளின் யூதர்களை ரயில் மூலம் அழைத்து வந்து, அவர்களின் நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பறித்துக்கொண்டு, பின் அவர்களை விஷ¬ வாயு அறையில் அடைத்துப் படுகொலை செய்தனர் நாஜிகள். இங்கு மட்டும் இரண்டரை லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட தாக வரலாறு கூறுகிறது.
அப்போதைய சோவியத் யூனியன் எல்லைக்குள்ளும் நுழைந்திருந்த நாஜிகள் சோவியத்தின் செம்படை வீரர்கள் சிலரையும் பிடித்து இங்கு கொண்டு வந்து சிறை வைத்தி ருந்தனர். சோவியத்தின் செம்படைதான் பின்னாளில் இட்லரின் நாஜிப்படைகளை தோற்கடித்து கிழக்கிலிருந்து மேற்காக பெர்லின் வரை விரட்டிச் சென்று நாஜிகளை முற்றிலுமாக வீழ்த்திய பெருமைக்குரியது. சோபிபோர் முகாமை நிர்வகித்து வந்த ஜெர்மன் பாசிச ராணுவ அதிகாரிகள் எவ்வளவு கொடுமையானவர்கள் என்பதை இப்படம் நமக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் கூறுகிறது. தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை என்ற மமதையில் அவர்கள் கைதிகளை பல விதத்திலும் சித்திரவதைகளுக்குள்ளாக்கினர். அதில் பெண்களும், இளைஞர்களும், குழந்தை களும் அடக்கம். செத்துத் தொலைந்தால் தேவலை என்ற நிலையில் கைதிகள் அன்றாடம் தங்கள் தலைவிதியை எண்ணி நொந்து கண்ணீர் விடுகின்றனர். கொடுமை தாங்காமல் சிலர் தப்பிக்க முயற்சிக்கிறார் கள். ஆனால் அவர்கள் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதோடு முகாமிலிருப்பவர் களுக்கும் கடுந்தண்டனை வழங்கப்படுகிறது. நாஜிகள், கைதிகளின் சிறு அசைவைக் கூட உற்றுக் கவனிக்கிறார்கள். உயர்ந்த முள்வேலி களும், பாதுகாப்பு கோபுரங்களும் தப்பிக்க நினைப்பவர்களுக்கு அச்சமூட்டுகின்றன. “சாஷா” என்ற சோவியத் யூனியன் செம்படை வீரன் மற்றும் அவனுடைய தோழர்கள் இந்தச் சூழலை அசாதாரணமான மன உறுதியோடு எதிர்கொள்கிறார்கள். அவர்களைப் போன்று மன உறுதியும், செயல் துணிவும் கொண்ட சில யூதர்கள் கிடைத்தால் ஒரு கலகத்தை உருவாக்கி, பாசிஸ்டு ஜெர்மன் அதிகாரிகளைக் கொன்றுவிட்டு முகா மிலிருந்து தப்பிக்கலாம் என்று திட்டமிடு கிறார்கள். ஒவ்வொரு யூதனாக ரகசியமாகச் சந்தித்துப் பேசி, நம்பிக்கையூட்டுவது சாஷா வுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பல நாட்கள் முயற்சிக்குப் பின் அப்படியான சிலரை தேர்ந்தெடுத்து, ரகசியமாகக் கூடி விவா தித்து தப்பிக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கு கிறார்கள்.
சாஷாவின் தலைமையில் அதை அவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை சாகசமும், திகிலூட்டும் விதமாகவும் படமாக்கி யிருக்கிறார்கள். எல்லாமும் உண்மையில் நடந்ததுதான். உண்மை, திரையில் வரும் நாட கத்தை விட எவ்வளவு பயங்கரமானதாயிருந் திருக்கும் என நினைக்கையில் மனம் திடுக்கிடுகிறது. தப்பித்தலின் இறுதியில் ஒரு யூதன் கேட்பான். “சாஷாவின் வீரத்திற்கு என்ன காரணம்?”. ஒரு செம்படை வீரன் பதிலளிப்பான். “சாஷாவின் இதயத்தில் ஸ்டாலின் இருக்கிறார். எங்கள் எல்லோரின் இதயத்திலும் ஸ்டாலின் இருக்கிறார்..!” 300 முதல் 600 பேர் வரை தப்பித்தனர் என்றும் பின்னர் அவர்களில் பெரும்பாலோர் மீண்டும் நாஜிகளால் சிறை பிடிக்கப்பட்டனர் என்பதும் வரலாறு. தப்பித்த யூதர்கள், சாஷா உள்ளிட்ட செம்படை வீரர்கள் பின்னாளில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ள னர். இன்றும் சோபிபோர் நாஜிகளின் கொடூ ரத்துக்கும், செம்படையினரின் வீரத்துக்கும் சாட்சியமாக இருக்கிறது. புத்தகமாகவும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படமாகவும் இவ்வரலாறு உலகம் முழுவதும் பல முறை பகிரப்பட்டிருக்கிறது. இப்போது 2018 இல் மீண்டும் ஒரு அற்புதமான ரஷ்யத் திரைப்பட மாக வந்துள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ரஷ்யாவி லிருந்து பரிந்துரைக்கப்பட்டது இப்படம்.