tamilnadu

உலகச் செய்திகள்

மியான்மரில் அமைதி திரும்புவதற்கான திட்டத்திற்குத் தனது ஆதரவு தொடரும் என்று கம்போடியாவின் பிரதமர் ஹன் சென் தெரிவித்துள்ளார். அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவர், ராணுவத்தலைவர்க ளோடு பேசவிருக்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பான ஆசியன் தலைமைப்பொறுப்பில் தற்போது கம்போடியா இருக்கிறது. ராணுவம் மியான்மரில் அதிகாரத் தைக் கைப்பற்றிய பிறகு பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டு அரசியல் தலைவர் ஹன் சென்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சி லில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ஐந்து நாடுகள் பொறுப்பேற்றுள்ளன. அல்பேனியா, பிரேசில், கபோன், கானா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையே அந்த நாடுகளாகும். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறும். உறுப்பினர் பொறுப்பை வகித்து வந்த நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் பணியை சரியான வகையில் செய்து முடித்தோம் என்று வியட்நாம் தெரிவித்துள்ளது.

நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்ட களமாக 2022 ஆம் ஆண்டு இருக்கும் என்று ஈக்கு வடாரின் பாப்புலர் பிரண்ட் அமைப்பு அறிவித்துள்ளது. 24 அமைப்புகளின் மேடையாக இயங்கும் இந்த அமைப்பு ஜனவரி 19 அன்று பெரும் அளவில் மக்களைத் திரட்டப் போகிறது. தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி கில்லர் மோ லஸ்ஸோ நடைமுறைப்படுத்தி வரும் தாராளமயக் கொள்கைகளை விலக்கிக் கொள்ளும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.