tamilnadu

img

இந்தி திணிப்பு ஒற்றை ஆதிக்கத்தின் உச்சம்!

இந்தி திணிப்பு ஒற்றை ஆதிக்கத்தின் உச்சம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இருமொழி கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள் ளப்பட்டது. அதன் மீது நடை பெற்ற விவாதம் வருமாறு: எழிலன் (திமுக): ஒன்றிய அரசு,  மாநில அரசுகளை எந்த மொழி யில் தொடர்பு கொள்ள வேண்டும்  என்பதை நமது அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகவே வகுத்து கொடுத்துள்ளது. மேலும் அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் சில பிரிவுகளை அழுத்தம்  திருத்தமாகவே சொல்லி யிருக்கிறது. இருமொழிக் கொள் கையை தமிழ்நாடு பின்பற்றும். அதுமட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டமே அங்கீகாரம் வழங்கி இருக்கும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு, தொடர்ச்சியாக இந்தி  பெயரில் திட்டங்களை தீட்டி, ஒவ் வொரு மாநிலமும் அதன் கோப்புகளை இந்தியில் வாசிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. நமது இரு மொழிக் கொள்கையை ஒழித்துக்கட்டி மும்மொழியை திணிக்க மறைமுகமாக முயற்சிக் கிறது. ஆர்.பி.உதயகுமார் (அதிமுக): உலகிலேயே ஒரு மொழிக்காக போராட்டம் நடந்து உயிர் தியாகம்  செய்தது என்றால் அது தமிழ் நாடுதான்.

அது நமது உயிர் மொழி.  அதை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. எங்கள் கட்சியும் அதில்  உறுதியாக இருக்கிறது. உயிருக் கும் மேலாக நேசிக்கும் மொழிக்கு  ஆபத்து என்றால், அதை எளிதில்  கடந்து செல்ல முடியாது. அதே  நேரத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் கள் பிற மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி  ஒதுக்குவோம் என்று சொல்வதை  ஏற்றுக்கொள்ள முடியாது. உட னடியாக நிதியை வழங்க வேண் டும்.

இருமொழி கொள்கைக்கு அரசும் முதலமைச்சரும் எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக நிற்கும். ஆளூர் ஷாநவாஸ் (விசிக): மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்க முயல்வது இந்தியைத்தான். அத னால்தான் தமிழ்நாடு அதை எதிர்க் கிறது. இந்தியை திணிப்பதில், சமஸ்கிருதத்தை திணிப்பதில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டுகிறது.  தேசிய மொழியாக அங்கீகாரம் செய்திருக்கும் 22 மொழிகளில் ஆங்கிலம் கிடையாது. எனவே தான் அதை தொடர்பு மொழியாக பயன்படுத்துகிறது. செல்வப்பெருந்தகை (காங்.): மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுக்க  மாட்டோம் என்பதில் முதல மைச்சர் உறுதியாக இருக்கிறார். மூன்றாவது மொழி ஜெர்மினியா? இந்தியா? என்பதை எங்கள் வீட்டு பிள்ளை முடிவு செய்வார்கள். அதை முடிவு செய்வதற்கு நீங்கள் யார்? இந்தியை எந்த வழியில் திணித்தாலும் தமிழ்நாட்டு மக்க ளும், தமிழ்நாட்டு முதலமைச்சரும் நிராகரிப்பர். டி.ராமச்சந்திரன் (சிபிஐ): ஒன்றிய அரசின் மக்கள் விரோத அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், முதலமைச்ச ரும் கடுமையாக எதிர்த்து வருவ தால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதி யாக குல கல்வி முறையையும் திணிக்கிறது. இவைகளை எதிர்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மீது  வன்மத்தை காட்டுகிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள். செத்துப் போன சமஸ்கிருதத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஒன்றிய அரசின் அனைத்து முயற்சி களையும் முறியடிப்போம். ஜி.கே.மணி (பாமக): தமிழ் நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.

தாய்  மொழியைவிட உயர்ந்த கொள்கை  எதுவும் இருக்க முடியாது. இந்தி யாவில் ஆட்சி மொழியாகத் தமிழ்  வர வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ‘காக்கைக்கும் தன்  குஞ்சு பொன் குஞ்சு’ அதைப்  போன்றுதான் நமது தாய்மொழி.  எனவே, இரு மொழிக் கொள்கை யில் முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணையாக இருப்போம். ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக): தமிழ்நாட்டில் மாணவர் களின் கல்வித்திறன் அதிகரித்து உள்ளதற்கு காரணம் இருமொழிக்  கொள்கைதான். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ் நாட்டிற்கு கல்வி நிதி வழங்க முடி யும் என ஒன்றிய அரசு கூறுவது அநீதியானது. ஒன்றிய அரசு தனது  சர்வாதிகாரத்தை கைவிட வேண் டும். வேல்முருகன் (தவாக): ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற  நிலையை உருவாக்கி வருவதால், ஒன்றிய பாஜக அரசு இந்தியை திணிக்க பல வழிகளிலும் முயற்சிக் கிறது. இரு மொழிக் கொள்கை யில் முதலமைச்சருக்கு உறு துணையாக இருப்போம். சின்னப்பா (மதிமுக), அப்துல் சமது (மமக) உள்ளிட்டோரும் பேசி னர். பாஜக சார்பில் யாரும் பேச வில்லை.

வண்ணமலர் தோட்டம், இந்தியா!

ன் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில்,  “செப்பு மொழி பதினெட்டு டையாள், சிந்தனை ஒன்றுடையாள்” - என்று சொன்னார் பாரதி. இந்தியா என்பது ஒரு வானவில். வானவில்லில் பல வண்ணங்கள் இருக்கும். அதேபோன்றுதான் இந்தியா  என்பது ஒரு மலர் தோட்டம். மலர் தோட்டம் என்று சொன்னால், அந்த  தோட்டத்தில் மல்லிகைப் பூ இருக்கும்; முல்லைப் பூ இருக்கும்; சாமந்தி பூ இருக்கும்; தாமரைப் பூ  இருக்காது. தாமரை மட்டும் வைப்ப தற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், நாம் சொல்கிறோம். இந்தியா  என்பது ஒரு வண்ண மலர் தோட்டம். உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. இதுதான் இந்தியா.  பல நாடுகளில் ஒற்றுமை குறித்து பேசு வார்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நாம் சொல்கிறோம். வேற்றுமை இருந்தால்தான் ஒற்றுமை. வேற்றுமை இல்லை என்று சொன்னால் ஒற்றுமை இல்லை. பல வகையான மலர்கள் இருந் தால்தான் அது ஒரு மலர் தோட்டம். இந்தியாவில் வேற்றுமை  இருந்தால்தான் இந்தியா ஒற்று மையாக இருக்கும். எனவே தான்  இந்தியாவுக்கு மட்டும் அந்த தனிச் சிறப்பு இருக்கிறது. ஆகவே தான் நாம் சொல்கிறோம் ‘வேற்று மையில் ஒற்றுமை’ தான் இந்தியா  என்று. ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்த வேற்றுமையை புறந்தள்ளி ஒற்றை கலாச்சாரம், ஒற்றை நடை முறையை நாடு முழுவதும் திணிப் பதற்கு முயற்சிக்கிறது. நாங்கள் இந்தியை படிக்க சொல்லவில்லை; மூன்றாவது மொழியைத் தான் படிக்க சொல்கிறோம் என்று தேன்  தடவுகிறார்கள். நீங்கள் மூன்றா வது மொழி என்று சொல்வது எது? பாஜக சொல்வது மறைமுக மாக இந்தி திணிப்புதான். அது எங்களுக்கு அவசியமில்லை. எனவே, அரசு எடுக்கும் அனைத்து  முயற்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணை யாக நிற்கும்.

புதிய திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நகராட்சிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலம்  தனது நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. முக்கிய மாற்றங்களாக, பெரம்பலூர் மற்றும் இராமநாதபுரம் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நக ராட்சிகளின் தரம் உயர்வும் நிகழ்ந்துள்ளது. சாலை சீரமைப்பு, பாதாளச்  சாக்கடை மேம்பாடு, LED தெருவிளக்குகள் அமைத்தல், மாண வர்கள் அறிவுசார் மையங்கள் ஆகியவை முக்கிய திட்டங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 7.5 கோடி மக்களுக்கு நிறைவான சேவைகள் வழங்கப்பட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்மாதிரி திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.

கந்தர்வகோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம்?

சட்டமன்றத்தில் கேள்வி  நேரத்தின் போது, கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னத்துரை “கறம்பக் குடி பேரூராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது எம்எம் 257 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். இது 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தினசரி  500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1996 ஆம்  ஆண்டு ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மிக வும் பழமையான இந்தக் கட்டி டம் தற்போது சிதிலமடைந்து உள்ளது. எனவே, அந்த கட்டி டத்தை புதுப்பித்துக் கொடுக்க  வேண்டும் என்றும் ஆவின் விற்பனை நிலையம், பால் பதப் படுத்துதல், குளிரூட்டுதல் நிலை யங்கள் அமைத்து கொடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், “பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.  நிச்சயமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும். புதிதாக கட்டடம் கட்டிக் கொடுப்பதற்கு தற்போ தைக்கு நிதியில்லை. பின்னர் பரி சீலிக்கப்படும்” என்றார்.