நெடுஞ்சாலைத் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 27- 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் சவரிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ரெங்கசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் தலைவர் பால்பாண்டி நிறைவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகி சிவாஜி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.