நாகர்கோவில், ஜூலை 6- கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவகாற்று காரண மாக கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல கட லோர கிராமங்கள் பாதிப்படைந் துள்ளன. ஜூலை 06 புதனன்று 5 வது நாளாக கடலில் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு கடல் அலைஎழும்பும் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை மையம் எச்சரித்தது. இதனால் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து புதனன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தேங்கா பட்டணம், பூத் துறை, வள்ளவிளை, தூத்தூர், ராஜாக்க மங்கலம் துறை, அழிக்கால் பகுதி களில் புதன் காலையில் ராட்சத அலைகள் எழும்பின. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததையடுத்து விசைப்படகுகள் மற்றும் கட்டு மரங்களை பாதுகாப்பான இடங்க ளில் நிறுத்தி வைத்திருந்தனர். கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி பகுதியில் கடல் சீற்ற மாக காணப்பட்டது. மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம், குளச்சல், தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.