சென்னை, மார்ச் 28 – அரசு ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஏப்.19 அன்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தெரி வித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று (மார்ச் 28) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி சென்னை எழிலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் மு.அன்பரசு கூறியதாவது: அரசு ஊழியர் சங்கத்தின் தலை மையில் செயல்படும் சங்கங்கள் சார் பில் உரிமை மீட்புக்காக நடை பெறும் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு 20 மாதங்களில் 3 பட் ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
அவற்றில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. ஒவ்வொரு அரசு ஊழி யரும் 4 ஊழியர்களின் பணியை செய்கின்றனர். அந்தளவிற்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப மறுக்கின்றனர். நிரந்தர அரசு ஊழியர்களை, அத்துக்கூலிகளாக மாற்றுவது தான் திராவிட மாடல் என்ற வகை யில் நிதியமைச்சர் செயல்படுகிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களி டத்தில் முதலமைச்சர் நம்பிக்கை யை விதைக்கிறார். நிதியமைச்சர் துரோகம் செய்கிறார். இழந்ததை பெற போராடிக் கொண்டிருக்கும் போது, இருப்பதை பறித்துக் கொண் டிருக்கிறார். ஒவ்வொரு அரசு ஊழி யரிடமிருந்து ஆண்டுக்கு 60ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு உள்ள னர். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக பணிகளை அவுட்சோர்சிங் விட வேண்டும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். பணியாளர் தேர்வாணையத்தை இழுத்து மூடும் வேலைகளை செய்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சத்து ணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவி லியர் போன்றோருக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி பிரச்சனையை தீர்க்காவிடில், ஏப்.19 அன்று கோட்டையை (தலைமை செயலகம்) முற்றுகையிடுவோம். இதுதவிர, ஜக்டோ-ஜியோ உயர் மட்ட குழு கூட்டம் ஏப்.2ந் தேதி நடைபெற உள்ளது. இதில், வேலைநிறுத்தம், முற்றுகை போன்ற தீவிரமான போராட்டங் களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.